விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா*  உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் 
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*  சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே* 
    பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்*  ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு* 
    மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*  கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூடாரை - தன் அடிபணியாதவர்களை
வெல்லும் சீர் - வெல்லுகின்ற குணங்களையுடைய
கோவிந்தா - கண்ணபிரானே!
ஊன் தன்னை - உன்னை
படி - (வாயாரப்)பாடி

விளக்க உரை

  "பகைவர்களை வெல்லும் கோவிந்தா! உன் புகழைப் பாடி பறையைப் பெற்று, பின் நாங்கள் இன்னும் உன்னிடத்து பெறவிரும்பும் பரிசுகள் யாவையெனில், அனைவரும் புகழத்தக்க முன் கையில் அணியும் வளைகளும், தோளுக்கு இடும் ஆபரணங்களும், தோடும், காதணிகளும், காலில் அணியும் ஆபரணங்களும், புதிய ஆடைகளும் ஆவன. இவைகளப் பெற்று புத்தாடைகளையணிந்து பால் சோறு மூடும்படி நெய் பரிமாறி, அவற்றை முழங்கையிலிருந்து வழியும்படி உண்டு, உன்னுடன் நாங்கள் கூடி, இன்புற்றிருந்து, குளிர வேண்டும். இவ்வாறாக எமது நோன்பு முடிவடைதல் வேண்டும்."

English Translation

O Govinda who brings disparate hearts together! See what fortunes, we have gained by singing your praise everywhere; jewels of world fame Sudakam bangles. Tolvalai-amulets, Todu-ear rings, Sevippu ear tops, Patakam – anklets and many others that we delight in wearing; clothes and finery, then sweet milk food served with Ghee that flows down the elbow: together we shall sit and enjoy these, in peace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்