விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்*  மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்* 
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*  பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே* 
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே*  சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே* 
    கோல விளக்கே கொடியே விதானமே*  ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலே - (அடியார் பக்கலில்) வியாமோஹமுடையவனே!
மணிவண்ணா - நீலமணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய் - (ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் பள்ளிகொள்பவனே!
மார்கழி நீராடுவனான் - மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார் - உத்தமபுருஷர்கள்

விளக்க உரை

உரை:1

‘பெண்காள்! “உன்னை யருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள்; நம்முடைய ஸம்ச.லேஷரஸத்திலே உத்ஸாஹமுடையவர்கள் வேறொன்றை விரும்பக்கூடாமையாலே, அதென் சொன்னீர்களென்று அதிலே ஒரு ஸம்சயம் பிறவாநின்றது; அதாகிறது எது? அதற்கு மூலம் எது? அதற்கு வேண்டுவன எவை? அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை? இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணபிரான் நியமித்தருள, அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘பிரானே! உன் முகவொளியை வெளியிலேகண்டு உன் திருநாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாயிருப்பதொரு நோன்பை இடையர் ப்ரஸ்தாவிக்கையாலே உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமா யிருக்கின்றமையைக் கருதி இடையர் பக்கலில் நன்றி ‘நினைவாலே’ அந்நோன்பிலே இழிந்தோம்; அதற்கு, முன்னோர்கள் செய்து போருவதொன்றுண்டு; அதற்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை; அவற்றையும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் பாசுரம், இது. இவர்கள் “மார்கழி நீராடுவான்” என்றவுடனே, கண்ணபிரான் மேன் மேலும் இவர்கள் வாயைக் கிளப்பி வார்த்தை கேட்கவிரும்பி, ‘மார்கழியாவதென்? நீராட்டமாவதென்? இது யார்செய்யுங் காரியம்? அப்ரஸத்தமான தொன்றைச் சொல்லா நின்றீர்களே என்ன; அது கேட்ட இவர்கள் “தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்” இத்யாதிகளை நெஞ்சிற்கொண்டு, ‘சிஷ்டாநுஷ்டாநம் ப்ரமாணமன்றோ? இந்நோன்பு சிஷ்டாநுஷ்டாந ஸித்தமன்றோ?’ என்கிறார்கள்.

உரை:2

"பக்தர்களை உன்மீது மயக்கங்கொள்ளச்செய்தவனே! நீல மணி போன்ற நிறத்தையுடையவனும், யாதவ குலவிளக்கு போன்றவனும், ஆலின் இலையில் துயில்பவனுமான கண்ணனே! நாங்கள் மேற்கொள்ளயிருக்கும் நோன்புக்கு தேவையான பால் போன்ற நிறமுடைய, உன் இடக்கையில் உள்ள பஞ்சசன்னியத்தை ஒத்த சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்ககளையும், பல்லாண்டு பாடுபவர்களையும், தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு அருள் புரிந்து அளிப்பாயாக!"

English Translation

Gem hued Lord who slept as a child on a fig leaf during Pralaya, the great deluge! We have performed the Margali rites as our elders decreed. Now hear what we want; conches like your milk white panchajanya which reverberates through all creation with its booming sound, a big wide drum, and singers who sing Pallandu, a bright lamp, festoons and flags, O Lord, grant us these.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்