விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்*  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்* 
    கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்*  வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்* 
    மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை*  எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் 
    எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்*  தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்.
     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குத்து விளக்கு - நிலை விளக்குளானவை
எரிய - (நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல் - யானைத்தந்தங்களினாற் செய்த கால்களையுடைய கட்டிலிலே
மெத்தென்ற - மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி - (அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்) ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டால் நப்பின்னைப் பிராட்டியை உணர்த்திச் “சீரார்வளையொலிப்ப வந்து திறவாய்” என வேண்டினவாறே அவள் கதவைத் திறப்போமென்று எழுந்து புறப்பட, அதனைக்கண்ட கண்ணபிரான், “நம்மைப்பற்றினாரை இவள் தன் அடியாராக அபிமானிப்பது போல, நாமும் இவளைப்பற்றினாரை நம்மடியாராக அபிமானிக்கவன்றோ அடுப்பது’ ஆனபின்பு நம்முடையாரான இவ்வாய்ச்சிகட்கு இவள் முற்பட்டுக் காரியஞ் வெய்தாளாக்கூடாது’ இவளை நோக்கிக் ‘கடை திறவாய்’ என்ற இவர்கட்கு நாம் முற்பட்டுக் காரியஞ்செய்தோமாக வேணும்’ அதனால் வரும் புகழச்சியை நாம் பெறவேணும்” எனக்கருதித்தான் சடக்கென எழுந்து நப்பின்னையைக் கதவுதிறக்கவொட்டாமல் மற்கட்டாகக் கட்டிப் பிடித்திழுத்துப் படுக்கையில் தள்ளித் தானும் அவள் மேல் விழுந்து, அவளுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் தானும் மயங்கி, ஆய்ச்சிகள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க, இவர்கள் அவனை எழுப்பின வளவில், நப்பின்னை, ‘நம்முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சிகளின் வெறுப்புக்கு நம்மை உறுப்பாக்கின இவனை வாய்திறக்க வொட்டுவதில்லை’ என்று அவனை விடை சொல்லவும் வல்லமையறும்படி சிக்கனக் கட்டிக்கொண்டு கிடக்க, இங்ஙன் மீண்டும் இவளை உணர்த்துவதும் கண்ணபிரானை உணர்த்துதற்காகவே என்க. முதலடியில் முந்துறமுன்னம் “குத்துவிளக்கெரிய” என்றது-நம்மைப்போல் ‘பொழுது விடியிற் செய்வதென்? என்று அஞ்சாமலும், இருளைத் தேடவேண்டாமலும் விளக்கினொளியிற் கிடந்து கிருஷ்ணன் முகத்தைக் கண்டு களிக்கப்பெறுகின்ற இந்நப்பின்னை என்ன நோன்பு நோற்றாள் கொலோ?’ என்னும் வியப்பை விளக்குமென்க. குத்துவிளக்கு - இஷ்டமான இடங்களில் பேர்த்துவைப்பதற்கு உரிய விளக்கு “கோட்டுக்கால் கட்டில் ல்” என்றதும் - ‘எங்களைப் போலே நெரிஞ்சிற்காடும் மணற் கொட்டகமுந்தேடி ஓடவேண்டாமல், இவள் ஒருத்தி மாத்திரம் வாய்த்தபடுக்கையில் சுகமாகக்கிடக்கப்பெறுவதே! என்னும் நினைவு நிகழ்வதைக்காட்டும். நந்தகோபன் உந்துமதகளிற்றனாகக் கூறப்பட்டனனாதலால் அவனது மாளிகையிற் கோட்டுக்கால் கட்டில் இருக்கத் தட்டில்லையே.

உரை:2

"நான்கு புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளுமை, மிருதுத் தன்மை, நறுமணம், வெண்மை ஆகிய ஐந்து குணங்களையுடய, தந்தத்தினால் ஆன மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் தலைசாய்த்து உறங்கும் கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு! (பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான கண்களையுடையவளே,நீ உன் கணவனான கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. ஒரு நொடியும் அவனது பிரிவைத் தாங்காத நப்பின்னை பிராட்டியே! இது உன் இயற்கைக்கும் குணத்திற்கும் ஒத்துவராது."

English Translation

Speak, O Lord, sleeping in a room with a lamp of oil burning softly, on a soft cotton mattress over an ornate bed, resting the flower coiffured Nappinnai’s breasts on your flower chest! Look, O collyrium anointed wide eyed lady Nappinnai; you do not let your spouse rise even for a moment. You unwillingness to part with him even once, is neither fair nor just.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்