விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்*  செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்* 
    செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்*  தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்* 
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்*  நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்* 
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*  பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் - உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர் - செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து - விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின - ஆம்பல் மலர்களின் வாய் மூடிப்போயின;
நாணாதாய் - (‘சொன்னபடி எழுப்பவில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே

 

விளக்க உரை

உரை:1

ஆய்ச்சியர் தரளுக்கெல்லாம் தலைவியாய், ‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும் உணர்த்தக்கடவேன்’ என்று சொல்லிவைத்து, அதனை மறந்து உறங்குவாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது. உணர்ந்த ஆய்ச்சிகள் எல்லாருமாகத் திரண்டு இவள் மாளிகை வாசலிலே வந்து நெடும் போதாக நாங்கள் உன் வாசலில் வந்து நின்று துவளா நிற்க, நீ எழுந்திரா தொழிவதென்?’ என்ன; ‘பொழுது விடியவேண்டாவோ எழுந்திருக்கைக்கு? பொழுது விடிந்தமைக்கு அடையாளமென்?’ என்று அவள் கேட்க: ‘செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினமை அடையாளமன்றோ?’ என்று இவர்கள் சொல்ல; அதற்கு அவள், ‘அஹஹ! உங்கள் மயக்கமிருந்தவாறு என்கொல்! நீங்கள் என் வாசலில் வந்த களிப்பின் மிகுதியால் உங்கள் கண்கள் அலர்ந்து, நீங்கள் என் முகம் பெறாதொழியவே வெள்கி வெறுத்து உங்கள் வாய் மூடிப்போன்மையைச் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினதாக நீங்கள் நினைத்திட்டீர்கள்; இது உங்களுடைய ப்ரமமே யொழிய வேறன்று’ என்ன; அதற்கு இவர்கள், ‘பேதாய்! வாவியிற் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினமையைச் சொன்னோங்காண் நாங்கள்’ என்ன; அதற்கு அவள், ‘இரவெல்லாம் வயலெங்குமுலாவி மொக்குகளை மலர்த்துவதும் மலர்களை மூடுவிப்பதுமன்றோ உங்களுக்குக் காரியம்’ என்ன; அடு கேட்ட இவர்கள்’ ‘கட்டுங்காவலுமாயுள்ள தோட்டத்து வாவிகளிலிருக்கும்படியைச் சொன்னோங்காண்’ என்ன; அதற்கு அவள், ‘அங்கும் நீங்கள் சென்றதாகத்தான் நான் சொல்லுகிறேன், என்ன; ‘நாங்கள் வந்தோமென்கைக்கு ஸம்பாவனையுமில்லாத உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியிலுள்ள படியைச் சொல்லுகிறோம்’ என்றார்கள்.

உரை:2

உங்கள் வீட்டுப் புழக்கடையின் இருக்கும் தோட்டத்துக் கிணற்றில் செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் பூ கூம்பிவிட்டதைப் பார். அதிகாலை நேரத்தில் நடக்கும் நிகழ்வல்லவா இது?! செங்கல் பொடியைப் போன்ற நிறத்தை உடைய ஆடையை அணிந்த, வெண்ணிறம் மாறாத பல்லை உடைய தவத்தில் சிறந்தவர், தங்கள் இறைப்பணி செய்யும் திருக்கோவில்களில் இறைப்பணி செய்வதற்காகச் செல்கின்றார்கள்! எங்களுக்கு முன்னால் எழுந்து எங்களை எழுப்புவேன் என்று வாயாடியாகப் பேசிய பெண்ணே! உனக்கு வெட்கமே இல்லை! வாய் மட்டுமே இருக்கிறது! எழுந்திருப்பாய்! சங்கும் சக்கரமும் ஏந்திய நீண்ட கைகளை உடைய தாமரைக் கண்ணனைப் பாடுவோம்!

English Translation

The white lily blossoms of the night have closed. The red lotus blossom in the garden pond has opened. The sacred temple ascetic with white teeth and russet cloth has gone to blow the temple conch. Wake up, shameless girl with brazen tongue; you spoke of waking us early! Come; sing the praise of the lotus eyed Lord who bears the discus and the conch of lofty hands.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்