விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்*  செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்- 
    பையிற் துயின்ற பரமன் அடி பாடி*  நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி* 
    மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்*  செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்* 
    ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி*  உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வையத்து - இப் பூமண்டலத்தில்;
வாழ்வீர்காள் - வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!;
நாமும் - (எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்;
உய்யும் ஆறு எண்ணி - உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து;
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி -
திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி;

விளக்க உரை

விசேஷ காரியத்தில் ஒருப்பட்டவர்கள் அக்காரியம் தலைக்கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்றவேண்டுமென்றும் அந்த வீடுபற்றுக்களை முதலில் ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களிற் கூறியுள்ளதனால், அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள் தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில். பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை, நாட்காலே நீராடுகை, ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டுகை ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை. நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை, மையிட்டெழுதாமை, மலரிட்டு முடியாமை, செய்யாதன செய்யாமை, தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை. “உண்ணோம், செய்யோம், ஓதோம்” என்ற தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் ஸங்கல்பத்தைக் காட்டுமவை. “செய்யுங் கிரிசைகள் கேளீரோ” என்றாற்போலவே “விடுங்கிரிசைகள் கேளீரோ” என்றுஞ் சொல்ல வேண்டாவோவென்னில்; வேண்டா; விடுகையென்பதும் செய்யுங் கிரிசையினுள் அடங்கக்கூடுமாதலின் எனவே, “செய்யுங் கிரிசைகள்” என்ற ஒரு சொற்போக்கிற்றானே வீடுபற்றுக்களிரண்டும் வெளியாயின வென்க.

English Translation

O people of the world pray hear about the vows we undertake, Singing the praise the Lord who sleeps in the Ocean of Milk, we shall abstain from milk and Ghee, and bathe before dawn. We shall not line our eyes with collyrium, nor adorn our hair with flowers. Regaining from forbidden acts, avoiding evil tales, we shall give alms and charity in full measure, and pray for the elevation of spirit. Let us rejoice.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்