விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

    ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்* 
    நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர்மல்கும் - செல்வம்நிறைந்துள்ள;
ஆய்ப்பாடி - திருவாய்ப்பாடியில்;
செல்வம் சிறுமீர்காள் - கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் ;
நேர் இழையீர் - விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே ;
மார்கழி திங்கள் - (மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும்;

விளக்க உரை

"அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 107 வது திருபார்கடலும் ,108 வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த இரு திருப்பதிகளை முடிவாக அடைய முடியும். இப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்."

English Translation

In the month of Margali of auspicious bright moon day, bejeweled girls who would join us for the bath! –come along. Graceful girls of Ayppadi cowherd clan, Sweet little ones! Narayana is the son of Nandagopa renowned for his sharp spear and fierce deeds! He is the darling-child, lion-cub of beautiful child Yasoda. Our dark hued, lotus eyed, radiant moon faced Lord alone will grant us our boons. Girls come, assemble and win the world’s praise.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்