விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
    நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 
    பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
    ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகம் - உலகத்தாரெல்லாரும்
சென்று - (தங்கள் தங்களிருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து - அவகரஹித்து
ஆடும் - நீராடா நிற்கப்பெற்ற
சுனை - தீர்த்தங்களையுடைய

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில், “இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது - ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’ என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் .... விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது. தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்;

English Translation

The whole world goes to Tirumalirumsolai on pilgrimagem to take a holy dip in its waters. At the feet of the Lord who stands there, this decad of songs is dedicated as a sincere prayer by Vishnuchitta, king of Puduvai town of mansions gleaming with gold. Those who master it will become agents of the Lord who measured the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்