விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்* 
    அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*
    பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்* 
    பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகம்படி - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து - பிரவேகித்து,
பாவை - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திசை - பல அலைகள்
மோத - சளும்ப

விளக்க உரை

‘பைம்கொண்ட பாம்பனையோடும்- மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று உபக்ரமத்தில் அருளிச்செய்தபடியே நிகமித்தருளுகிறார்- எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும் மிக்க அன்பாதலால் அவற்றைவிட்டுப் பிரிந்து வரமாட்டாமல் அவற்றையும் உடன்கொண்டு எழுந்தருளினனென்க. இது மற்றுமுள்ள நித்யஸூரிகளோடுங்கூட எழுந்தருளிமைக்கு உபலக்ஷணமென்பர். அமளி- - படுக்கை. அரவிந்தம் - வடசொல் பாவை- உவமையாகுபெயர். அகம்படி வந்து புகுந்து- அந்தரங்க பரிஜகங்களோடுகூட வந்து புகுந்து என்று முரைப்பர். பாவை- கடல்; எம்பெருமான் அழைத்துக்கொண்டுவந்த திருப்பாற்கடல், “பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்”- (இப்படி) ஆத்துமாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுகின்றான் என்றபடி. இத்திருமொழி ஸ்வயமே இனியதாயிருத்தலால் இதற்குப் பயன் கூறாதொழிந்தன ரென்க. அடிவரவு நெய் சித்திர வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதம் உறகல் அரவத்துக்க.

English Translation

The Lord who sleeps in the ocean amid lashing waves, and the lady-of-the Lotus, the resplendent serpent-bed, the beautiful Milk Ocean, all have entered Vishnuchitta’s being, who sang this songs of praise, for guarding the fortress.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்