- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இவ்வாழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலன்றி, ‘எம்பெருமானுக்கு என்வருகிறதோ’ இதுவரை தம்மை எம்பெருமானால் காக்கப்பட்டவராக அநுஸந்தித்துப் போந்தவிலர், அவனுக்குங் காவல் தேடுகிறார், இப்பாட்டில், எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களையும், அஷ்டதிக் பாலகர்களையும், வாஹநத்தையும் விளித்து, நீங்களெல்லாருமாகச் சேர்ந்து உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்து எம்பெருமானுடைய படுக்கைப்பற்றை நோக்கிக் கொண்டிருங்கள் என்கிறார். உறகல்- உறங்கவேண்டா என்று பொருளையுடைய உறங்கல் என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்றின் சிதைவு. ‘உறகல் உறகல் உறகல்’ என்ற அடுக்குத்தொடர், அச்சம் பற்றியது. ‘இறவுபடாமல் உறகல்’ என இயையும்; அன்றி, ‘இறவுபடாமல் இருந்த’ என அடைவே இயைத்து, என்றும் இறவாமல் வாழ்கின்ற என்று பொருள் கொள்வாருமுளர் . (எண்ம ருலோக பாலீர்காள்.) “இந்திரனங்கி யாமனிருதி வருணன், வந்தவாயு குபேரனீசாநன், என்ன வெண்டிசை யுலோகபாலகர்” என்பது திவாகரம்.
English Translation
Ye radiant discuss and conch, Vigil! Ye deadly dagger Nandaka, Vigil! Ye beautiful Sarnga bow, Vigil! Ye eternal sentinels of the eight Quarters, Ye king of birds, be vigilant and stand guard over my Lord’s bed-chamber!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்