விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏதங்கள் ஆயினஎல்லாம்*  இறங்கல்இடுவித்து*  என்னுள்ளே- 
    பீதகவாடைப்பிரனார்*  பிரமகுருவாகிவந்து*
    போதில்கமல வன்நெஞ்சம்*  புகுந்து என்சென்னித்திடரில்* 
    பாத இலச்சினை வைத்தார்*  பண்டன்றுபட்டினம்காப்பே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இறங்கவிடுவித்து - நீக்கி
என் - என்னுடைய
சென்னித்திடரில் - தலையினிது
பாத விலச்சினை - ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார் - எறியருளப்பண்ணினான்

விளக்க உரை

ஸர்வேச்வரத்வத்திற்கும் புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப்பீதாம்பரத்தைத் திருவரையில் அணிந்துள்ள ஸர்வேச்வரன் ஞானோபதேசம் பண்றுகிற ஆசாரியாக என் நெஞ்சினுள் வந்து புகுந்து தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியபுத்தி, அய்யகேஷாதபுத்தி, ஸ்லரக்ஷண பரத்வம், ஸ்வப்ரயோஜகபாத்யா முதலிய மனக்குற்றங்களை ஒழித்து அவ்வளவிலும் பர்யாப்திபெறாமல் தனது திருவடிகளை இலச்சினை படும்படி என் தலைமேல் அமைத்து இவ்வாறு பரமோகபாரம் பண்ணியருளினனாதலால், இவ்வாத்துமா பண்டுபோலன்றி இப்போது குறைவற்ற காப்பை அடைந்திராநின்ற தென்கிறார். திருவடிகள் ஏறவொண்ணாதமேட்டில் அத்திருவடிகளை ஏற்றியருளினான் என்ற சமத்காரந்தோற்றச் “சென்னித்திடரில்” என்றனரென்க. (பாதவிலச்சினை வைத்தார்) தோளுக்குத் திருவாழியிலச்சினை யிட்டதுபோலத் தலைக்குத் திருவடியிலச்சினை யிட்டனனென்க. இனி, திருவாழியிலச்சினை தலையிலுமுண்டென்க; ‘ஒரு காலிற்சங் கொருகாலிற்சக்கர முள்ளடிபொறித்தமைந்த , இருசாலுங் கொண்டங்கங் கெழுதினாற்போலிலச்சினை

English Translation

Purging me of my past karmas, the Lord of yellow vestments came as my Guru and entered into my being. Residing in my lotus-heart, he stamped his footprint on my forehead too. No more like old, the fortress is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்