விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மங்கிய வல்வினை நோய்காள்!*  உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்* 
    இங்குப் புகேன்மின் புகேன்மின்*  எளிது அன்று கண்டீர் புகேன்மின்*
    சிங்கப் பிரான் அவன் எம்மான்*  சேரும் திருக்கோயில் கண்டீர்* 
    பங்கப்படாது உய்யப் போமின்*  பண்டு அன்று பட்டினம் காப்பே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் வினை - வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள் - வியாதிகளே
உமக்கும் - உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை - ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர் - (இன்று) பாருஙக்ள்

விளக்க உரை

என்றபடி வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை விளித்து, ‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது. இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்னிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமேபலிக்கம்; வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார். மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள்! என்னவுமாம்; “சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க. பங்கம்- ** மென்வர் ** புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவப்ற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொருசொல், விரைவுபற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.

English Translation

This is a treasure-house of jewels. Any evil minded rogues there, beware! The wonder Lord who came as a beautiful manikin has fondly come to stay in me permanently. So run, do not tarry. No more like old, the fortress is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்