விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை*  மெத்தையாக விரித்து*  அதன்மேலே- 
    கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்*  காணலாங்கொல் என்றுஆசையினாலே*
    உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி*  உரோமகூபங்களாய்க்*  கண்ணநீர்கள்- 
    துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்*  சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெள்ளத்தின் மேல் - பெருக்கிலே
ஒரு பாம்பை - ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து - படுக்கையாக விரித்து
அதன் மேலே -  அப்படுக்கையின் மீது
கள்ளம் பித்திரை கொள்கின்ற மார்க்கம் - (நீ) யோகநித்தை செய்தருளும்படியை

விளக்க உரை

பிராபிருதமான உயவு அடியேனுக்கில்லை என்றாற்போல, அறக்கமுமில்லையெகிறார், இப்பாட்டில் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு யோக நித்திரை செய்தருளுங் கிராமத்தை ஸாக்ஷாத்கரிக்கப்பெறலாமோ வென்னுமாவல்கொண்டு, (“பாலாழி நீ கிடக்கும் பண்பையாங் கேட்டேயும், காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்கிறபடியே) அவ்வநுஸன்தாநகமடியாக நெஞ்சு அழியப்பெற்று, ப்ரீத்யதிசயத்தினால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச வொண்ணாதபடி ஏங்கி உடம்பெல்லாம் ரோமாஞ்சிதமாகப் பெற்று, ‘நமது மநோரதம் தலைக்கட்டவில்லையே’ என்ற அவஸாதத்தினால் கண்ணீர் துளிதுளியாகச் சோரப்பெறுகையால் இதுவே சிந்தையாய்ப் படுக்கையிற் சாய்ந்தால் கண்ணுறங்கப் பெறாத அடியேன் உன்னை எவ்வாறு கிட்டுவேனோ, அவ்வழியை அருளிச் செய்யாய் என்கிறார். எம்பெருமான் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்கின்றனனாதலால், கள்ளநத்திரை எனப்பட்டது. நித்திரை - *** . மார்க்கம்- *** . உரோமகூபம் - ***மென்ற வடமொழித்தொடர் விகாரப்பட்டது. ரோமம் - மயிர்; கூபம் -குழி. தத்துறுதல் என்பதற்குக் கீழ்ப்பாட்டில் “தட்டுப்படுதல்” என்று பொருள் கூறப்பட்டது; இப்பாட்டில், அச்சொல்லுக்கே கிட்டுதல் என்று பொருள் கூறப்படுகின்றது. ஒரு சொல்லுக்கு பல பொருள் கொள்ளக்கூடுமிறே. அன்றி, கீழ்ப்பாட்டிற் போலவே இப்பாட்டிலும் தந்துறுதல் என்று மாறுபாட்டையே சொல்லிற்றாய், கிட்டுதல் என்பது தாத்பரியப் பொருளாகவுமாம்; உள்ளஞ்சோர்தலும், உகர்தெதிர் விம்முகையும் கண்ணநீர்துள்ளஞ் சோர்தலும், துயிலணை கொள்ளாமையும் மாறுபடுவதே எம்பெருமானைக் கிட்டுகை என்று கருத்து. இனி, உண்மைப்பொருளை வல்லார் வாயக் கேட்டுணர்க.

English Translation

O Lord reclining in the Milk Ocean on a serpent-couch in feigned sleep! In the hope of having a beatific vision of you, my heart melts, my words fail, my hairs stand on their ends, and my eyes shed fine tears. I cannot go to sleep. Pray tell me, how am I to reach you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்