விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
    உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 
    இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
    அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சதம் - மிக்க கோபத்தையுடைய
களிறும் - குலையாபீடத்தையும்
பிலம்பளையும் - ப்ரலம்பாஸுரனையும்
கடிய - மிகவும் க்ரூரான
மாவும் - குதிரை வடிவாய் வந்த நேசியையும்

விளக்க உரை

எம்பெருமான் தன்னை அடுத்தவர்களைப் பாரமபதத்திலேரற்றி நித்திய கைங்கைரிய பரராக்குமாறு கூறுவன, பின்னடிகள். பரமபதத்துக்குப் போவார் ஸூர்ய மண்டலத்தைக் கீண்டுகொண்டு போவதாகக் கூறப்படுவதனால் “எறிகதிரோன் மண்ணடலத்தூடு” என்றார். “தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கிண்டு புக்கு” என்று சிறிய திருமடலிலும், “மன்னுங்கடுகதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள், அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னுந் தொன்னெறிக்கண் சென்றாரை” என்ற பெரிய திருமடலிலும், “இந்தவுடல் விட்டிராவிமண்டலத்தூடேகி இவ்வண்டங் கழித்திடையிலாவரண மேழ்போய், அந்தமில்பாழ்கடந்தழகார் விரசைதனிற் குளித்தங்கமாநவனாலொளிக்கொண்ட சோதியும் பொற்றமரர், சந்தெதிர்கொண்டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த வைகுந்தம்புக்க மணிபண்டபத்துச் சென்று, நந்திருமாலடியார்கள் குழங்களுடன் கூடும் நாளெனக்குக் குறுகும்வகை நல்கென்னெதிராசா” என்ற ஆர்த்திப் பிரபந்தத்திலும் (மணவாள மாமுனிகள்) அருளிச் செய்துள்ளவை காண்க. (ஏணிவாங்கி) மேல் ஏறுகைக்குச் சாதனமாயிருப்பது எதுவோ அது ஏணி எனப்படும்; அதாவது இங்கு எம்பெருமானுடைய உபாயத்வம்; பரமபதமேறுமளவுமிறே எம்பெருமானுக்கு உபாயத்வமென்கிற ஆகாரமுள்ளது; ஏறினபிறகு இவன்றனக்கு உயேத்வமென்கிற ஆகாரம் வருதால் “எணி வாங்கி” என்றாரென்க. ***- ***- ***- என்ற விடத்து ***- ” என்றது நோக்கத்தக்கது. பரமபதத்தில் எம்பெருமான் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியா யறுகையாலே, அங்கு அவனுக்கு உபேயத்வமே யன்றி உபாயத்வமல்லையென்க.

English Translation

The Lord who destroyed the sinister Arjuna trees, the angry elephant, the Asura Pralamba, the fierce horse Kesin, the cart that ran a muck, and the mighty wrestlers, --as simply as the pots he broke to enjoy the sounds they made, -- resides in Tiru-Arangam. He lifts devotees into the realms of the radiant Sun with a tall ladder-of-no-return, reveals himself and takes them into his service in Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்