- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,* வெந் தீவினையால்-
உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,* ஒரு பொழுதில்-
பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ!*
தெரிவுற்ற கீர்த்தி,* இராமாநுசன் என்னும் சீர் முகிலே.
காணொளி
பதவுரை
தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது - தெளிவான ஞானத்தைச் சேரப்பெறாமல்;
வெம் தீ வினையால் - மிகவுங் கொடிகான கருமத்தாலே;
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை - உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலையில்லாமல்) திரிகிற என்னை;
ஒரு பொழுதில் - ஒரு க்ஷணகாலத்தில்;
பொருவு அற்ற கெள் வயன் ஆக்கி நின்றான் - ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கியருளினவரும்;
விளக்க உரை
English Translation
I was an ignorant one, without proper knowledge, roaming around with faulty understanding in a trice. Ramanuja made me a peerless learned one, and stood aside, while the world raved and said, "What a blessed one!". He is famed for his benevolence that matches the raincloud.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்