விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து,*  முன்னாள் 
    அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு,*  அவை என்தனக்கு அன்றருளால்-
    தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்*  தான் அதுதந்து* 
    எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு - உபஸமஹாரத்தையடைந்து அசேதநப்ராயமா யிருப்பதைப் பார்த்து;
என் தனக்கு - (அப்படி அசேதந ப்ராயராய்க்கிடந்தவாகளில் ஒருவனான) எனக்கு;
அவை - அந்த சரண களேபரங்களை;
அன்று - அக்காலத்தில்;
அருளால் தந்த அரங்கனாம் - க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம்;

விளக்க உரை

ப்ரளயத்தின்போது மனம் மற்றும் அனைத்து இந்த்ரியங்களும் அழிந்து, நாசம் அடைந்து, அசித் பொருள்களுடன் இணைந்தபடி கிடந்தது. அந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட மனம் மற்றும் இந்த்ரியங்களை எனக்கு அளித்த திருவரங்கன், தனது அபயஹஸ்தத்தை மட்டுமே காண்பித்தபடி இருந்தான்; தனது திருவடிகளில் சரணம் என்று என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அந்தச் சூழ்நிலையில் எனது தந்தையான எம்பெருமானார், ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, நான் வசித்து வந்த திருவரங்கத்தைத் தேடி வந்தார். என்னை வாரி எடுத்து, என்னிடமிருந்து எதனையும் எதிர்பாராமல், ஸ்ரீரங்கநாதனே அளிக்காமல் இருந்த அவனது திருவடிகளை எனக்கு அளித்தார். இப்படியாகப் பகவானே எடுக்கத் தயங்கிய என்னை, தான் எடுத்துக் கொண்டார்.

English Translation

Then in the deluge the mind and sense organs of all souls were destroyed and lay absorbed in the soul. Seering this the lord of Arangam repaired the souls and restored their faculties. But even he did not give me his refuge in such measure as Ramanuja has done. Today he has uplifted me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்