விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போரவிட்டிட்டு என்னை*  நீபுறம்போக்கலுற்றால்*  பின்னையான்- 
    ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!*  எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*
    தீர இரும்புஉண்ட நீரதுபோல*  என்ஆர்உயிரை- 
    ஆரப்பருக*  எனக்கு ஆராஅமுதுஆனாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீ என்னை போர விட்டிட்டு - நீ என்னை அநாதாரித்து
புறம் போக்கல் உற்றால் - உபேகூஷித்துப் பொருட்டால்
பின்னை - ஸர்வ சக்தியான நீயுமிப்படி கைவிட்டபின்பு
யான் - அசக்தனான நான்
ஆரை கொண்டு - எந்த உபாயத்தைக் கொண்டு

விளக்க உரை

ஸர்வரகூஷகனாள நீ உபேகூஷித்தால் என்காரியம் நான் செய்யவோ? பிறர் செய்யவோ? நாளும் செய்;ய முடியாமல் பிறரும் செய்ய முடியாதபடி. யன்றோவிருப்பது; இனி முடிந்தேனத்தனையன்றோவென்கிறார். என்னைப் போரவிட்டிட்டு நீ புறம் போக்கலுற்றால்-வேறு புகலற்ற வென்னை உன் பக்கலிலே நின்றும் பிரித்து உபேகூஷித்து உனக்குப் புறம்பான விஷயாந்தரத்தில் போக்க நினைத்தாலென்றபடி. என் காரியம் நானே செய்துகொள்வேனாகப் பார்த்துக் கைவிட்டாலென்பது பரமதாற்பாரியம். பின்னை யான் ஆசைக்கொண்டு எத்தை யந்தோ-ஸர்வசக்தியான நீ அநாதாரித்த பின்பு அசக்தனான நான் எந்த வுபாயத்தைக்கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? ‘ஆரைக் கொண்டு எத்தை” என்றவிடத்து வினைமுற்று ஒன்றுமில்லாமை அவாய்நிலை. எனதென்பதென்? யானென்பதென்?-‘முடிந்தேனத்தனைக் என்பது இதன் கருத்து. தீரவிரும்புண்ட நீரது போல என்னாருயிரை ஆரப்பருக எனக்கு ஆராவமுதானாயே-பழுக்கக் காய்ச்சின இரும்பானது காய்ச்சல் தீர நீரை நிச்சேஷமாகப் பருகுமா போலே என் ஆத்ம வஸதுவைப் பாரிபூர்த்தியாக புஜிக்கைக்காகவன்றே எனக்கு உன்னுடைய போக்யதையைக் காட்டி என்னை யகப்படுத்தினாய் என்றபடி. அன்றியே, என்னாருயிரை என்றவிடத்து ஜகாரத்தைத் தள்ளி (என்னாருயிர் என்றதாகக் கொண்டு) என்னாருயிரானது உன்னை ஆரப்பருகும்படியாக எனக்கு நீ பரம போக்யனானவ னல்லையொ வென்று முரைப்பர்.

English Translation

If you forsake me and let me wander, with whom do I do and what? Alas, what is left of me, what am I? My Lord, you drank my soul like a red hot iron dropped in water, you are my ambrosia, sill

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்