விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மங்க ஒட்டு உன் மாமாயை*  திருமாலிருஞ்சோலைமேய* 
    நங்கள் கோனே! யானேநீஆகி*  என்னை அளித்தானே*
    பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்*  கருமேந்திரியம் ஐம்பூதம்* 
    இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி*  மான்ஆங்காரம் மனங்களே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யானே நீ ஆகிஎன்னை அளித்தானே - நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே!
பொங்கு ஐம்புலஎம் - கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
பொறி ஐந்தும் - ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கருமேந்திரிமம் - கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐம்பூதம் - பஞ்ச பூதங்களும்

விளக்க உரை

பிரானே! உடலுமுயிரும் மங்கவொட்டென்று வேண்டச் செய்தேயும இப்படிப் மேல் விழுகிறாயே, இது தகுமா? எ;னறு ஆழ்வார் கேட்க, அதற்கு எம்பெருமான் ‘சாந்து பூசுவார் பரண்யை;யுடைத்தோ பூசுவது? சாந்துக்கு ஆச்ரயமான பரணியும் உபாதேயமன்றோ’ என்று சொல்ல; விர்வான ளுக்திகளாலே ஆழ்வார் அவனைத் தெளிவிக்கிறாராயிற்று. (உன் மாமாயை மங்கவொட்டு) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யா என்று கீதையில் நீ தானே சொல்லிவைத்தாயே; ஒருவராலும் தப்பவொண்ணாதபடி குருவிபிணைத்த பிணையாக நீ பிணைத்த பிணையிலே ஆதரம் தவிரப்பாராய். (திருமாலிருஞ்சோலை மேய நங்கள் கோனே!) பரமபதத்தை விட்டு நீ திருமாலிருஞ்சோலை மலையிலே வந்து நிற்கிறது அடியார்கள் சொன்ன படியே நடந்து ஆச்ர்ற்தபாரதந்திரியத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவன்றோ? இன்னமும் என் சொற்கேளாதே நீ ஸ்வாந்திரனாயே நின்று நினைத்தபடி செய்வ கொள்ள வேண்டாவே. (யானே நீ யாகி யென்னை யளித்தானே!) என்னிடத்தில் எனக்கு எவ்வளவு பாரிவு உண்டோ அவ்வளவு பாரிவு உனக்கும் இல்லையோ? யானே நீ யென்னலாம்படி யிருந்துவைத்து இ;ப்போது எனக்கு அநபிமதமானதைச் செய்யத்தகுமோ? என்று இங்ஙனே ஆழ்வார் சொல்லச்செய்தேயும் எம்பெருமான் இணங்காதிருப்பதுகண்டு, தேஹத்தின் ஹேயமான தன்மையைப் பின்னடிகளால் (8.8) என்கிற திருவாய் மொழியிலே ஜீவாத்மாவின் சீர்மையை; எம்பெருமான் ஆழ்வார்க்கு உணர்த்தினான்; இப்போது ஆழ்வார் எம்பெருமாளுக்கு அசேநந்தின் தன்மையை உணர்த்துகிறார்; சிஷ்யாசர்ய க்ரமம் மாறினதாயிற்று. பொங்கு ஐம்புலஎம் - சப்தாதி விஷயங்கள் ஐந்தும், அவற்றிலே அகப்படுத்து கைக்கு உறுப்பான செவிகண் முதலிய ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் அவ்விஷயங்களில் ப்ரவர்த்திக்கைக்கு ஹேதுவான கைகால் முதலான கருமேந்திரியங்களில் ஐந்தும், சாரிரத்திற்கு ஆரம்பங்களான நிலம்நீற் முதலான பூதங்கள் ஐந்தும் ஆகஇவை இருபது; ஸம்ஸாரதசையில் ஜீவனோடீட மிகப்பொருந்தியிருக்கிற மூலப்ரக்ருதி, வ்யவஸாய ஹேதுவான மஹான், அபிமாந ஹேதுவான அஹங்காரம், ஸங்கல்பஹேதுவான மநஸ்ஸூ ஆக இவை நான்கு; இவ்விருபத்து நான்கு தத்துவங்களின் கூட்டரவாக நீ கட்டிவைத்திருக்கிற மாயையிலே இப்போது நீ வீணாகப் பண்ணுகிற ஆதரத்தை விட்டுத் தொலைக்கப்;பாராய் - என்றாராயிற்று. திருமாலிருஞ் சோலைமேய நங்கள் கோனே! யானே நீயாகி யென்னை யளித்தானே!, பொங்கைம்புலஎம் பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களாகிற உன்மாமையை மங்கவொட்டு என்று அந்வயிப்பது. இங்து ஐம்புலன்களுக்கு பொங்கு என்று அடைமொழி கொடுக்கப்பட்டது; பரமபோக்யமென்று பிரமிக்கச் செய்யுந் தன்மைவாய்ந்த என்றபடி.

English Translation

O My Lord of Malirumsolai, my protector, my own self. These five sensory fields, five sensory organs, five motor organs, five elements and the four envelopes of the soul are all part of your cosmic Lila, Pray let them die!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்