விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்* 
    அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*
    பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு* 
    வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆகம் கீண்டான் - உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர)
வாட்டாறு - திருவாட்டாற்றிலே
பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான் - ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய்
வாரி வாள் வாய் அரவு அணை மேலான் - சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான்
அன்று - முன்பொரு காலத்தில்
அர் ஆகி - நரசிங்க மூர்த்தியாகி

விளக்க உரை

பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார். இப்போது தாம்பெற்ற பெறாதபயன் எது வென்னில்; இனியொரு நாளும் பிரியாதேயிருந்து அடிமை செய்யுமாறு சோதிவாய் திறந்து அருளிச்செய்த தொன்று; இனிமேல் பிறப்பு நேராதபடி வேரோடறுத்த தொன்று; அடிமை செய்யென்று சொல்லி விட்டவளவேயன்றிக்கே கைங்காரியங் கொண்ட தொன்று - ஆகிய இவை பெற்ற பேறுகள். இவை எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையாலன்றி மற்றொன்றால் பெறமுடியாதவை யாதலால் பெறாதபய னென்றது. இரண்டாமடிக்கு அவதாரிகை யிடுகிறார் நம்பிள்ளை - “இதுக்கு முன்பே தமக்குப் பண்ணிற்றோருபகாரத்தைச் சொல்லுகிறார்” என்று. அரியாகி இரணியனை ஆகங்கீண்டதும் தமக்குப்பண்ணின உபகாரமென்றிருக்கிறாராம் ஆழ்வார். தாம் அநுபவிக்கைக்காகவே அவதாரங்கள் அமைந்த வென்று கருத்து. இரண்டாமடியின் முடிவில் அன்று என்றிருப்பதனால், அன்று அவ்வுபகாரம் செய்தான். இன்று இவ்வுபகாரம் செய்தானென்று சொல்லுவதாக தேறுகிறதன்றோ; அன்று மின்றும் தமக்கே செய்ததாகத் தேறினாராயிற்று. பெரியார்க்காட்பட்டாக்கால் பெறாதபயன் பெறலாமென்று எங்கே சொல்லியிருக்கிற தென்னில்; ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் ஷத்ரபந்துவின் உபாக்யானத்தில் - *மஹாத்மநாம் ஸம்ச்ரயமப்யுபேதோ தைவாவஸீதத்யதிதுர்க்கதோபி* என்றுள்ளது அதிதுர்க்கதோபி - மிகவும் வறியனாயிருந்தாலும், மஹாத்மநாம ஸம்ச்ரயம் அப்யுபேதா:- பெரியார்க்கு ஆட்பட்டானாகில், நைவ-அவஸீததி - மேன்மையையடைவனே யல்லது கீழ்மையை யடையமாட்டா னென்றபடி. இப்பாசுரத்தைத் திருவுள்ளத்திற் கொண்டு தேசிகன் பாதுகாஸஹஸ்ரத்தில் பணித்ததொரு ச்லோகமும் நினைவுக்கு வருகின்றது - *அதாரிக்ருதோபி மஹதா தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு, அலபதஸமயே ராஜ்யம் பாதாக்ராந்தாபி பாதுகா சௌரே!* என்று. “மஹா புருஷ ஸமாச்ரயணம் பண்ணினால் பின்னை அவர்கள், கொள்ளுகிறவன் சிறுமைபார்த்தல் கொடுக்கிற பொருளின் பெருமைபார்த்தல் செய்யாதே கொடுப்பார்களென்று இங்ஙனே நாட்டிலே யொன்றுண்டு; அத்தை என்பக்கலிலே காட்டினான்; ப்ரஹ்லாதாதிகளைக் கொண்டு திருவாய் மொழிபாடுவித்துக் கொண்டானோ?” என்பது ஈடு.

English Translation

The Lord in Tiruvattaru reclines on a hooded serpent. He came as a lion and tore Hiranaya's wide chest. He broke my cords of rebirth and made me his servant granting favours such as I have never had before

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்