விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே* 
    நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*
    தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை- 
    தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பணி வகையே - பண்டு பணித்திருந்தபடியே
வாட்டாற்றான் - திருவாட்டாற்றெம்பெருமான்
நான் ஏற பெறுகின்றேன் - நான் மேலே செல்லப் பெறாநின்றேன்.
நெஞ்சே நரகத்தை நகு - மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச்
சிரித்திடுசெழு பறவை தான் ஏறி - அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய

விளக்க உரை

அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார். திருவாட்டாற்றெம் பெருமாளுக்கு “வானேற வழிதந்த” என்றே நிருபகம்போல அருளிச்செய்கிறார் காண்மின், வானேறு வதற்கான வழி - அர்ச்சிராதி மார்க்கம். *முத்தோர்ச்சிரி திநபூர்வபஷ ஷடுதங்மாஸே த்யாதியாக நடாதூரம்மாளருளிச்செய்தது காண்க. *நடைபெறவங்கிப் பகலொளி நாளுத்தராயணமாண்டு* இத்யாதியானவொரு பாசுரமுங்காண்க. வானேறும் வழியைத் தரவிருக்கிறானேயல்லது தந்துவிட வில்லை; ஆயிரம் தந்த வென்று இறந்தகாலமாகக் கூறினது அதற்கு றம்பற்றியென்க. பணிவகையே நானேறப் பெறுகின்றேன் - அவன் கீதையிலே *மோஷயிஷ்யாமி மாசுச* என்று பண்டே சொல்லிவைத்திட்டானே; அப்பேறுதன்னை விரைவில் நான் பெறவிருக்கின்றேனென்று திருவுள்ளத்தைக் குறித்துக் கூறினாராழ்வார்; அதற்கு நானென்ன செய்யவேண்டுமேன்று திருவுள்ளம் கேட்க நரகத்தை நகு நெஞ்சே! என்கிறார். நெடுநாளாக நம்மை ஸம்ஸாரியாக்கி யெளிவரவுபடுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்துச் சிரி; உன்னை அடியறுத்தோமே யென்று சொல்லிச் சிரி என்கிறார். பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ; அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம்பற்றித் திருமாலை திருப்பாரிவட்டம் முதலான வாரிசைகளை வரவிட்டருளினவளவிலே “நானேறப்பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப்பார்த்துச் சிரித்தாராம். “நரகத்தைநகு” என்ற இவ்விடத்திற்கு நரகலோகத்தைப்பார்த்துச் சிரியென்று சிலர்பொருள் கூறுவர்; அதுவேண்டர் ஸம்ஸாரத்திற்கே நரகமென்று பெயராதலால் ஸம்ஸார பூமி யென்கிற பொருளே இங்குக் கொள்ளத் தகும். பேறு கைப்புகுந்தாலன்றோ நரகத்தைச் சிரிக்கலாம்; அது கைபுகுந்து விட்டதோ வென்ன் அதில் ஸந்தேஹமென்? என்கிறார் பின்னடிகளால். எம்பெருமான் தாளிலணிந்த துளபமாலையுடன் பெரிய திருவடியின்மேலேறி வந்து நின்று ஸேவை ஸாதிக்கின்றானே, இனி நான் வானேறுவதில் ஐயமுண்டோ என்பது பின்னடிகளின் பரமதாற்பாரியம். தேனேறு மலர்த்துளவந் திகழ்பாதன் - *தேனே மலருந் திருபாதம்* என்றபடி எம்பெருமானுடைய திருவடிகளில் தேன் வெள்ளமிடுமே; *விஷ்ணோ: பதே பரமெ மத்வ உத்ஸ.* என்று வேதமும் ஓதிற்றே; அந்தத் தேனும் திருத்துழாயில் ஏறித் தேனேறு மலர்த்துளவமாயிற்றென்க. செழும் பறவை தானேறி - *பறவையேறு பரம்புருடா! நீயென்னைக் கைக்கொண்டபின்* என்கிறபடியே ஆழ்வாரைக் கைக்கொள்கைக்கு செழும்பறவை மீதேறி வந்தானாயிற்று திரிவான - திரிவானுடைய் அ-ஆறாம் வேற்றுமையுருபு; பெரிய திருமொழியில் (8.7.10) *கலியன தமிழிவை* என்ற பிரயோகமுங்காண்க. தாளிணை என்தலை மேலே - பெரிய திருவடியின் தோளிலேயிருந்த திருவடிகள் தம் தலை மேலேயேறப்பெற்ற அதிசயம் என்னே! என்று வியக்கிறார்.

English Translation

The Lord of Tiruvattaru gave me the path of liberation at his behest, I have his feet on my head. The Lord wears honey-dripping Tulasi and rides the Garuda. Now you can laugh at Hell, O Heart of mine!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்