விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாதம்நாளும்*  பணிய தணியும்பிணி* 
    ஏதம்சாரா*  எனக்கேல் இனிஎன்குறை?*
    வேதநாவர் விரும்பும்*  திருக்கண்ணபுரத்து 
    ஆதியானை*  அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதம் நாவர் விரும்பும் – வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான
திருக்கண்ணபுரத்து –  திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற
ஆதியானை – முழுமுதற்கடவுளான எம்பெருமானை
அடைந்தார்க்கு – ஆச்ரயித்தவர்களுக்கு
அல்லல் இல்லை – துக்கமொன்று மில்லையாகும்

விளக்க உரை

பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார். அவனது திருவடிகளை யாச்ரயிக்கவே அநாதி காலமாகத் திரட்டின பாவங்களெல்லாம் தொலையும் ; இனிமேல் பாவம் வந்து புகாது. இது என்னுடைய அநுபவத்தாலே; நான் குறை தீர்ந்தேனாகையாலே நீங்களும் குறை தீரப்பெ வேணுமென்று சொல்லுகிறேன். வேதமறிந்த வைதிகர்கள் திரும்பி வர்த்திக்கிற திருக்கண்ணபுரத்திலே, ஸந்நிதி பண்ணியிருக்கிற ஜகத்காரண பூதனையடைந்தார்க்கு அல்லல் இருக்குமோ? தாய்மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசமில்லை யென்னுமிடம் சொல்லவேணமோ?

English Translation

Worship him and be rid of diseases. Our karmas will not bind us, so what do we lose? Vedic seers prefer the Lord in Tirukkannapuram. Those who attain him have no despair

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்