விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலையும்வந்தது மாயன்வாரான்*  மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
    கோல நல்நாகுகள் உகளும்ஆலோ!  கொடியன குழல்களும் குழறும்ஆலோ*
    வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்*   மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
    வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!*  என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா மணி புலம்ப – பெரிய மணிகள் ஒலிக்கும் படி
வல் ஏறு அணைந்த – வலிய ரிஷபங்களோடு சேர்ந்த
கோலம் நல் நாகுகள் உகளும் ஆல் ஓ – அழகிய பசுக்கள் களித்துத் திரிகின்றன வந்தோ!
குழல்களும் – புல்லாங்குழல்களும்
கொடியன – கொடுமை செய்வனவாகி

விளக்க உரை

வருவதாகக் குறித்துப் போனகாலம் வந்தது, அவன்றான் வருகிறிலன் மாலைவாய்த் தன்னுடைய நாவொழியாதாடுந் தனிமணியின் இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நெடிதாகும். என்னிதனைக் காக்குமா சொல்வீர் (பெரிய திருமடல்) என்கிறபடியே மாட்டின் கழுத்து மணியோசையானது விரஹிகளுக்கு உத்தீபகமாகையாலே அதற்கு நோவுடுகிறபடி சொல்லுகிறது. ஏறுகளும் வாகுகளும் கலந்து பரிமாறிக் கோலாஹலங்கள் வெய்யுமதுவும் உத்தீபகமாம். கோடியன குழல்களும் குழறுமாலோ=கீழே 'அவனுடைத் தீங்குழல்' என்று ஒருமையாகச் சொல்லிற்று இங்கே 'குழல்களும்' என்று பன்மையாகச் சொல்லுகிறது ; இதன் கருத்தை ஆறாயிரப்படியில் பிள்ளான் விலரித்தருளாகிறார்– "வண்டுவரைப் பெருமாளுடைய திருத்தோழமைரர் குழல்களை யூதிக் கொண்டு வந்து புகுராநின்றனர்" என்று, இதற்கு மேலே வண்டுகள் பலவப் பூக்களிலும் படிந்து முரல்கின்றதுவும் உத்தீபகம், கடலலை யோசையும் கர்ணகடோரம். இப்படியான பாதகவர்க்கங் களினிடையே அவனுடைய பிரிவை எங்ஙனே யாற்றுலேனென்றலாயிற்று.

English Translation

Evening has come, but no my Lord, now how can I live? Oh, alas! Cow bells are jinging, flute melodies are floating in the air, bumble bees have drunk deep from the Mullai, Jasmine and Karumugai flowers, The ocean rents the air with its roaring waves, alas, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்