விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!*  பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ* 
    அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்*   கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*  
    மதுமண மல்லிகை மந்தக்கோவை*  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து* 
    அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே*  ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புன் செக்கர் ஆல் ஓ – புல்லிய செக்கர் வானமும் வந்து நலியா நின்றது
அது மணந்து அகன்ற – அப்படி கலந்து பிரிந்த
நம் கண்ணன் – நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம்
கண்ணனில் – அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது
இனி அதனில் – இன்னமும் அதுக்குமேலே உம்பர்

விளக்க உரை

இங்ஙனே பொங்கிளவாடையானது புது மணத்தை முகந்து கொண்டு எறியா நிற்கச்செய்தே அதன்மேலே புன் செக்கர் வந்து நலியாநின்றது; அதன்மேலே, சொல்ல முடியாதபடியாக என்னுடனே கலந்து அகன்ற கண்ணனுடைய அக்கலவி நினைவுக்கு வந்து அவன்றன்னிலும் கொடிதாய் நின்று என்னை யீராநின்றது? இனி அதுக்குமேலே மதுமணை மல்லிகை மாலையும் வண்பசுந்சாந்தும் வந்து பாதிக்கின்ற. அதன்மேலே, நம்மோடே இங்ஙனே குதவை கோத்துக் கலந்து பரிமாறுகைக்குத் தன் பக்கலிலே நான் வருகைக்காக ஆராய்ச்சியரான நமக்கே கேட்கும்படி பஞ்சமராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழ ஆராச்சியரான நமக்கே கேட்கும்படி பஞ்சமராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழலோசை யொன்றே நின்று என்னை முடிக்கினறது அந்தோ! என் செய்வேனென்கிறாள். இரண்டாமடியிலும் ஈற்றடியிலும் "அதுமணந்து" என்றது விலக்ஷணப்ரேயகம்; 'அது அது' என்னும்படியான கல்வியைச் செய்து–வாசாமகோசரமாக ஸம்ச்லேஷித்து என்றபடி.

English Translation

The cool fragrant breeze, and the fading red clouds are more wicked than that Krishna who played tricks on me and left. Now the sweet Panchama he pays on his flute for the Gopis in his favour with honey-jasmine garlands and cool Sandal paste, is more than I can bear

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்