- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும் முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார். தாளதாமரையான் உனதுந்தியான்– தாமரைப் பூவைப் பிறப்பிடமான வுடையனான பிரமன் உனது திருநாபியைப் பற்றியிராநின்றான். தாமரையிற் பிறந்தோ மென்று துர்மான முடையவனான அவனுக்கு உடம்பு கொடுத்தது என்னே என்று வியக்கிற படி. வாள்கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்– தொடையொத்த துளபமுங் குடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரப்பொடி என்னுமாபோலே சேஷத்வலக்ஷணம் பொலிந்திருக்கையன்றிக்கே கொலைக் கருவியான மழுவையுடைய வொருவன் உன்திருமேனியிலேக தேசத்தைப் பற்றி யிரா நின்றான். அந்த துர்மானிக்கு முட்பட உடம்பு கொடுத்த நீலம் என்னே! என்று வியக்கிறபடி. ஆளராய்த் தொழுவாரு மமரர்கள்–அமரர் என்கிற பெயர் நித்யஸுரிகளுக்கே உரித்தாயிருக்க, ப்ரயோஜநாந்தரபார்களான தேவர்களும் அப்பெயரைப் பூண்டு கொண்டு உனக்கு ஆட்பட்டவர்களாகத் தம்மைச் சொல்லிக் கொண்டு திரிவதும் அவர்களுக்குங்கூட முகங்கொடுப்பதும் என்னே! என்று வியக்கிறபடி. உலாசீலம் நாளும் என் புகழ்கோ= காலதத்வமெல்லாங்கூடினாலும் உன்னுடைய சிலத்தை எத்தைச் சொல்லிப் புகழ்வேன்!
English Translation
Brahma sits on your lotus-navel. Siva occupies your right side, Celestials stand around you and worship. Can I ever praise you fully?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்