விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
    ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 
    கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
    ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீதம்நீர் - குளிர்ந்த நீராலே
படைசூழ் - சுற்றும் சூழப்பெற்ற
செழு - செழுமை தங்கிய
கழனி உடை - கழனிகளையுடைய
திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருக்கிற)

விளக்க உரை

திருக்கோட்டியூரெம்பெருமானுக்கு அடிமை செய்யும் பாகவதர்களைப் புகழ்ந்தும், அடிமை செய்யாது விஷயங்களிலே மண்டித்திரியும் பாவங்களை இழந்தும் அருளிச்செய்த இவற்றை ஓதவல்லபிராக்கள் எம்பெருமானுக்கு நித்யகைங்கரியம் பண்ணப்பெறுவர்களென்று பலஞ்சொல்லிக்கட்டியவாறு. சீதம்- வடசொல்திரிபு. ஆதியன்- முதல்வன். புதுவைக்குக் குளிர்த்தியாவது- ஸம்ஸாரதாபங்களை ஆற்றுக

English Translation

This decad of songs about the devotees of the first-Lord of Tirukkottiyur surrounded by cool waters and fertile fields, and about those who wander with out devotion, is by faultless Pattarbiran, Vishnuchitta, Lord of Srivilliputtur. Those who recite it flawlessly will be servants of Hrisikesa.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்