விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மருந்தேநங்கள்*  போக மகிழ்ச்சிக்குஎன்று* 
    பெரும்தேவர் குழாங்கள்*  பிதற்றும்பிரான்*
    கரும்தேவன்எம்மான்*  கண்ணன்விண்உலகம்* 
    தரும்தேவனைச்*  சோரேல்கண்டாய்மனமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெருந்தேவர் குழாங்கள் – நித்பஸுரிகணங்கள்
பிதற்றும்பிரான் – வாய்வெருவும்படியான ஸ்வாமியாய்
கருதேவன் – கரிய திருமேனியை யுடையனாய்
எல்லாம் கண்ணன் – எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய்
விண் உலகம் தருமதேவனை – பரமபத போகத்தைத் தரவானான பெருமானை

விளக்க உரை

நாங்கள் போகமகிழ்ச்சிக்கு மருந்தேயென்று பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் என்கிறவிதற்கு–பகவத்விஷய ப்ரஸ்தாநத்தில் ஒருவகையான அர்த்தமும் ரஹஸ்ய ப்ரஸ்நத்தில் மற்றொரு வகையான அர்த்தமும் ஸம்ப்ரதாயஸித்தம் “உன்னழகாலே எங்கள் போகத்துக்கு வத்த கனானவனேயென்று பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல். உன்னுடைய அநுபத்தால் எங்களுக்கு வருமானந்தத்துக்கு வத்த கனானவனே என்பது ஈடு முதலிய வியாக்கியானங்களிலருளிச் செயல். இனி, முமுக்ஷப்படியில் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்யுமது கேண்மின்; அதில் த்வயார்த்ததை விவரித்தருளுமிடத்து (த்வயப்ரகரணத்தின் முடிவில்) நமஸ்ஸீக்குப் பொருளருளிச் செய்கையில் (180) “நம: –கைகங்கர்யத்தில் களையறுக்கிறது; களையாவது தனக்கென்னப்பண்ணுமது” என்றருளிச் செய்தார். அதாவது, பகவந்முகவிகாஸத்திற்கு ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற ப்ரதிபத்தியில்லாமல் தன்னுடைய ஸந்தோஷத்தையே ப்ரயோஜனமாக நினைத்துச் செய்வது புருஷார்த்த விரோதியென்றும். அந்த விரோதியைக் கழிக்கிறது நமஸ்ஸென்றும் ரஹஸ்யாத்தமுள்ளது. கைங்கர்யம் வாய்க்க வேணுமென்றும் நித்யப்ரார்த்தனை நடக்கவேணுமென்று அருளிச் செய்து, இந்த ப்ராத்தனை இந்நிலத்தில் மாத்திரமன்று, திருநாட்டிலுமண்டு என்றுமருளிச் செய்து, அதற்கு ப்ராமாணமாக ‘மருந்தேநங்கள் போகமகிழ்ச்சிக்கு’ என்னுமிப்பாசுரத்தை யெடுத்துக் காட்டியுள்ளார் பிள்ளைலோகாசார்யர் (187) “மருந்தேநங்கள் போகமகிழ்ச்சிக்கு என்னாநின்றதிறே” என்கிறத விதுவே த்வயப்ரகரணத்தின் முடிவுசுர்ணை. அவ்விடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் வருமாரு;.– கந்தல்கழிந்த அந்நலத்திலும் ஸ்வபோகத்க்ருக வோதய முண்டாமோவென்ன அருளிச்செய்கிறார் (மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிககென்னா நின்றதிறே) என்று. அதாவது, உன்னுடைய அநுபத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துககு ஸ்வபோக்த்ருத்வபுத்தியை விளைவித்து ஸ்வரூபத்தையழியாதபடி ஸாத்மிப்பிக்கும் பேஷஜமானவனே யென்று நித்யஸுரிகள் பேசும்பாசுரமாகச் சொல்லாநின்றதிறேய்னக என்று. இப்படி பிள்ளைலோகாசார்யரும் மணவாளமாமுனி களுமருளி செய்த ரீதியில் பாசுரத்தில் பொருள் காணுமளவில், நாங்கள் போகமகிழ்ச்சிக்கு மருந்தே!–உன்யைநுபவித்து அத்தாலே எங்களுக்கு உண்டாகுமானந்தத்தை ஸ்வரூபவிருத்தமாக்கமல் ஸ்வரூபாநுருப்மாகச் செய்யவல்ல மருந்தாயிருக்குமவனே! என்பதாகப் பொருள் காணவேணும். ஸ்வரூப் விருத்தமான ஆனந்தமாவது என்ன? ஸ்வரூபாநுரூபமான ஆனந்தமாவது என்ன என்னில்: ‘நானநுபவிக்கிறேன், என்னுடைய அநுபவமிது’ என்று கொண்டு உண்டாகிற ஆனந்தம் ஸ்வரூப விருத்தமானது. ‘அவன் வஸ்துவை அவன் அநுபவிக்கிறான். அவன் ஆனந்ததப்படுகிறான்’ என்றுகொண்டு அவனது ஆனந்தத்தைக் கண்டு உண்டாகிற ஆனந்தம் ஸ்வரூபாநுரூபமானது. ஸாரமாகக் கேண்மின்; சேதநனாகையாலே ஆனந்தப்படாமலிருக்க முடியாது ; அவர்ஜநீயமாய் ஆனந்தம்பிளையும் ; தன்னையநுபவித்து அவனுக்குண்டாகிற முகமலத்தியைக் கண்டு ஆனந்திப்பதேயுள்ளது. வேறு ஸ்வந்த்ரமான ஆனந்தம் உண்டாகக் கூடாதென்றும் அது ஸ்வரூபவிருத்தமென்றும் அநுஸந்தானம் செல்லவேணும், இவ்வநு ஸந்தானம், இங்கிருக்கிற காலத்தோடு ப்ராப்யபூமியில் சென்று சேர்ந்தகாலத்தோடு வாசியற் எப்போதும் நடந்துசெல்லும் என்பதே. இதற்கு ப்ரமாணமாகவுள்ள பாசுரம் “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கு” என்கிறவிது. ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இவ்வர்த்த விசேஷத்தை வெளியிட்டருளாதது குஹயதமென்பது பற்றியேயென்க,

English Translation

Extolled by hordes of celestials as the Soma of their bliss, the dark Krishna is our liberation, Note, O Heart, so never leave him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்