விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நுகர்ச்சி உறுமோ மூவுலகின்*  வீடு பேறு தன்கேழ்இல்* 
    புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட*  பொன்ஆழிக்கை என்அம்மான்*
    நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்*  நீண்ட அசுரர் உயிர்எல்லாம்* 
    தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்*  பெரிய தனிமாப் புகழே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிகர் செம் பங்கி - தங்கள் ஜாதிக்குத் தகுதி யாகச் சிவந்த செம் பட்ட) மயிர்களையும்
எரி விழிகள் - அக்நி சக்ரம் போன்ற கண்களையுமுடயராய்
நீண்ட - பருத்த வடிவு படைத்தவர்களான
அசுரர் - அசுரர்களினுடைய
உயிர் எல்லாம் - பிராணன்களை யெல்லாம்

விளக்க உரை

“தன் கேழில் புகர்ச்செம்முகத்தகளிறட்ட பொன்னாழிகை யென்னம்மான்“ என்பதனால், கம்ஸனாலேவப்பட்ட குவலாபீட மென்னும் மதயானையின் நிரஸமும், “நிர்ச்செம்பங்கி யெரிவிழிகள் நீண்ட வசுர்ருயிரெல்லாம் தகர்த்துண்டுழலும் புட்பாகன்“ என்பதனால் கொடிய வசுரர்களின் நிரஸநமும் சொல்லப்பட்டு, இப்படி விரோதி நிரஸந சீலனான எம்பெருமானுடை திருக்குணங்களை பாகவத ப்ரீதிகரமான திருவாய்மொழி முகத்தாலே அநுபவித்து ரஸிக்கைக்கு, மூவுலகின் வீடுபேறு உறுமோ? – ஸர்வேச்வரத்வம் ஈடாகுமோ? மூவுலகின் வீடு –மூவுலகங்களையும் காண விடுகை, அதாவது ஸ்ருஷ்டிக்கை, அது வாகிற பேறு –ஸர்வேச்வரத்வ மென்றபடி. ஈட்டு ஸ்ரீ ஸூக்தி –“மூவுலகின் வீடு பேறு தன் ஸங்கல்பைகதேசத்தாலே ஜகத்ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களாம்படியிருக்கிற ஐச்வர்யம்.“

English Translation

The wealth of the three worlds and the enjoyment of one's self in heaven, put together, -will it equal the joy I have found here and now, through serving the selfless devotees of the cloud-hued Lord's lotus-feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்