- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார். அமர்ந்த நாதனை –எம்பெருமானைத் தவிர்த்துப் பிறர்களை இவ்வுலகுக்கு நாதரென்றால் “ஐயோ? இது தகாத பேச்சாயிருந்தது“ என்று பரிதபிக்கவேண்டியிருக்கும், எம்பெருமானை நாதனென்று சொன்னால் தகும் தகும் என்னும்படியாயிருக்குமாம், “அமர்ந்த நாதனை“ என்றதற்கு இதுவே கருத்து. *த்ரைலோக்யமபி நாதேந யேந ஸ்யாத் நாதவத்தரம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகம் இவ்விடத்திற்கு மிகப் பொருத்தமானது. “ஆனைப் பிணங்களைக் குதிரை சுமக்கவற்றே என்னாதபடி உபய விபூதிக்கும் நாதனென்றால் தக்கிருக்கும்மவனை“ என்று இருபத்தினாலாயிரம். அவரவராகி –இதற்குக் கீழே “நாதனை“ என்று வந்தபடியாலே அதற்குச் சேர இதற்குப் பொருள் கொள்ளவேண்டும், நாதன் என்பதற்கு –அர்த்திக்கப்படுமவன் என்று பொருளாகையாலே அர்த்திகள் நினைவுக்கு வரக்கூடியவர்கள், மேலே “அவர்க்கருளருளும்மானை“ என்றிருக்கையாலே அதற்குச் சேரவும் பொருள் கொள்ளவேணும், ஆகவே, அவரவராகி யென்றது – அந்தந்த அர்த்திகளாகியென்று பொருள்படும். இதற்கு இரண்டு வகையாகக் கருத்தருளிச் செய்வர். அவர்கள் “இது நமக்கு வேணும்“ என்றிருப்பதுபோல எம்பெருமான் “இவர்களுக்கு இது வேணும்“ என்றிருப்பனாம் –அதைச் சொல்லுகிறதென்று முதற் கருத்து. அவர்கள் அர்த்திகளாயிருக்குமாபோலே இவனும் அர்த்தியாயிருக்கும், கொடுக்கவேணுமென்று அவர்கள் அர்த்தித்தால் கொள்ள வேணுமென்று இவன் அர்த்திப்பனென்பது இரண்டாங்குகருத்து. அவரவர்களது அபேக்ஷதங்களைத் தன்பேறாகக் கொடுக்குவனென்றதாயிற்று. கீழ் ஆறாம்பாட்டில் * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்றருளிச் செய்த்துபோல இங்கும் * அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி * என்றருளிச் செய்கிறார். “முக்கணம்மானை நான்முகனை“ என்றது –முக்கண்ணனுக்கும் நான் முகனுக்கும் உயிரானவனை யென்றபடி.
English Translation
The eternal Lord graces all by becoming all of them, I have attained forever the Lord who is Siva and Brahma too. He resides in Tirucchengunrur on the banks of Tirucchitraru, inspiring three thousand Vedic seers and devotees of high merit
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்