விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
    நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*
    மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
    மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலிருஞ்சோலை என்னும் - திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை - திருமலையை
உடைய - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
கால் இரு மூர்த்தி தன்னை - திருவஷ்டாக்ஷா ஸ்வரூபி யானவனும்

விளக்க உரை

இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டாதொழிந்தது- இப்பாசுரங்களின் பொருளை அறிகையே இது கற்கைக்குப் பயனாமென்று திருவுள்ளம் பற்றி யென்க. (நாலிருமூர்த்தி தன்னை.) வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்று நால்வகையாக கூறப்பட்ட பெரிய வடிவையுடையவனென்பதும் பொருளாம்; அப்போது, இரு என்பதற்கு- இரண்டு என்று பொருளன்று; இருமை- பெருமை. மூர்த்தி- வடசொல் என்ற பிரமாணத்தின்படி ‘அஷ்டாக்ஷா ஸ்வரூபியானவனை’ என்று உரைப்பதும் பொருந்துமென்க. நால்வேதக் கடலமுது என்று- திருமந்திரத்தைச் சொல்லிற்றாய், அதனால் கூறப்படுகிறவன் என்கிற காரணங்கொண்டு, ஆகுபெயரால் எம்பெருமானைக் குறிக்கின்றதென்றது மொன்று.

English Translation

These songs by Vishnuchitta praise the eight-syllable Mantra personified, the Amruta from the ocean of the Vedas, the excellent Kalpaka tree, the lamp that light the maze of Upanishadic thoughts, and the mountain of goodness that rules the mountain of Malirumsolai!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்