விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,* 
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,* 
    சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,* 
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் - மனோவாக்காயங்களாலே
நிலத்தேவர் குழு வணங்கும் - பாகவத கோஷ்டி வணங்கப்பெற்ற
சிந்தை மகிழ்திருவாறன் விளை உறை -மகோஹரமான திருவாறன் விளையிலே வாழ்கிற
தீர்த்தனுக்கு அற்றபின் - பரமபவித்தரனான பெருமானுக்கு அற்றுத்தீர்ந்த பின்
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அலலா தன்மை - எனது மனம் வேறெனறை உத்தேச்யமாக  நினைத்திராத படியை

விளக்க உரை

ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே ப்ராவண்யம் முற்றியிருந்தீராகிலும், பலகாலும் பரமபதமென்று வாய்வெருவிக்கிடந்தீராதலால் எம்பெருமான் அதையே கொள்ளுமென்று நிர்ப்பந்தித்துக் கொடுத்கானானாகில் என் செய்வீரென்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு உத்தரமுரைக்கிறார். இப்பாட்டில் அவன் புருஷார்த்தப்ரதன் என்று ப்ரஸித்தனல்லனோ. புருஷன் அர்த்தித்ததை யன்றோ அவன் கொடுத்தருள்வன். எனது ப்ரஸித்தனல்லனோ. புருஷன் அர்த்தித்தைறையும் கணிசியாதிருக்கும்படியை அவன் அறிய அசக்தனல்லனே; அறிந்துவைத்து எங்ஙனே மற்றொன்றுதன்னைக் கொடுப்பவனே என்கிறார். “மற்றென்கிறது பரமபதத்தின் பேர் சொல்லுகையுங்கூட அஸஹயமான படி.” என்ற ஈடு காண்க.

English Translation

I Have resigned myself to the Lord who lives in Tiruvaranvilai, where devotees worship him through thougnt, world and deed. The Lord Tevarpiran knows my heart to the core. He knows that I nurture no secret desires

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்