விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றைக்கும் என்னை*  உய்யக்கொண்டு போகிய,* 
    அன்றைக்கு அன்று என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
    இன் தமிழ் பாடிய ஈசனை*  ஆதியாய்- 
    நின்ற என் சோதியை,*  என் சொல்லி நிற்பனோ? (2)         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னை தன் ஆக்கி - இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி
என்னால் - என்னை உபகரணமாகக் கொண்டு
தன்னை - வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக
இன் தமிழ் பாடிய - இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற
ஈசனே - ஸ்வாமியாய

விளக்க உரை

காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் உஜ்ஜீவிக்கத் தகுதியாம்படி அங்கீகரித்துக் கழிகிற நாள்கள்தோறும் என்னைத் தனக்கு அடிமை ஆக்கி, என்னால் தன்னை இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்ட ஈசனை, காரணமாய் நின்ற என் சோதியை என்ன என்று சொல்லித் தரிப்பேன்?

English Translation

Oh, How shall I sing of my radiant first-cause Lord? Day by day he makes me rise higher and higher. Each day he makes me his own, and sings through me his praise in Tamil verse

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்