விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆம் வண்ணம் இன்னது ஒன்று*  என்று அறிவது அரிய அரியை,* 
    ஆம் வண்ணத்தால்*  குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த* 
    ஆம் வண்ண ஒண் தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    ஆம் வண்ணத்தால் உரைப்பார்*  அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று - இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று
அறிவது அரிய அரியை - (ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை
குருகூர் சட கோபன் - நம்மாழ்வார்
ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த - உள்ளபடியறிந்து அருளிச் செய்த
ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள் - தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள்

விளக்க உரை

 ‘உண்டான பிரகாரம் இன்னபடிப்பட்டது ஒன்று,’ என்று அறிதற்கு அரிய சர்வேஸ்வரனை, ஆகின்ற தகுதியால் திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அறிந்து அருளிச்செய்த பொருந்திய ஓசையையுடைய அழகிய தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் தங்களுக்குத் தகுந்த முறையால் சொல்ல வல்லவர்கள், தாங்கள் என்றைக்கும் ஈஸ்வரனுடைந அனுபவத்துக்குச் சமைந்தார்கள் ஆவார்கள்.

English Translation

This decad of the thousand radiant songs by kurugur Satakopan on the Lord who cannot be described as this or that, -those who master it will become devotees of Hari

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்