- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
சித்திரத் தேர் வலவா!* திருச் சக்கரத்தாய்! அருளாய்,*
எத்தனை ஓர் உகமும்* அவை ஆய் அவற்றுள் இயலும்,*
ஒத்த ஓண் பல் பொருள்கள்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே!
காணொளி
பதவுரை
சித்திரம் - விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே!
தேர் வலவா திரு சக்கரத் தாய் - திருவாழிப்படையை யடையவனே!
அருளாய் - நீயருளிச் செய்ய வேணும்;
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் - க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய்
அவற்றுள் இயலும் - அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய்
விளக்க உரை
அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற ஒத்தனவாயும் ஒள்ளியவாயும் எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின் வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்; இவை என்ன வேறுபாடுகள்! அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.
English Translation
Beautiful discus Lord Deft Charioteer! Pray speak; the many countless eyes, -and moving within them, the countless myriad objects, transient or not, -wondrously you stand as these, what mischief's are these?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்