விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்டும்கொலோ நெஞ்சமே!*  கடிய வினையே முயலும்,* 
    ஆண்திறல் மீளிமொய்ம்பின்*  அரக்கன் குலத்தைத் தடிந்து,*
    மீண்டும் அவன் தம்பிக்கே*  விரி நீர்இலங்கைஅருளி,* 
    ஆண்டு தன் சோதிபுக்க*  அமரர் அரியேற்றினையே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மீளி - சிங்கம் போன்றவனாய்
மொய்ம்பின் - பெருமிடுக்கையுடையனான
அரக்கன் - இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய
குலத்தை - குடும்பத்தை
தடிந்து - தொலைத்திட்டு
மீண்டும் - பின்னையும்

விளக்க உரை

விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.

English Translation

Can we see him too, O Heart? He destroyed the demon clan of deathly might and wickedness, and gave the kingdom to the younger brother, then himself ruled like a lion among gods in abounding glory

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்