விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 
    புல்பா முதலா*  புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
    நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 
    நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புல் பா முதல் ஆ - புல்லாகிற பதார்த்தம் முதலாகவும்
புல் எறும்பு ஆதி - மிக அற்பமான எறும்பு முதலாகவும்
நல் பால் அயோத்தியில் வாழும் - (ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற
சராசரம முற்றவும் - ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும்.
ஒன்று இன்றியே - ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும்

விளக்க உரை

இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில். தசரத சக்ரவர்த்தியின் கட்டளையின்படி இராமபிரானைத் தேரிலேற்றிக் கொண்டு போய்க் கங்கைக்கரையில் விட்டுத் திரும்பியவத்த ஸீமந்த்ரன் சக்ரவர்த்தியிடம் சொல்லுகிறான்- விஷயே தே மஹாராஜ! ராமவ்யஸநகர்சிதா: அபிவ்ருகூஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குர கோரகா: உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச, பரிசுஷ்கபலாகாநி வநாந்யுபவநாநி ச என்றான். மஹாராஜரே! உம்முடைய திருக்குமாரன் நாட்டைவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுச் செல்லுகிறேனேயென்கிற துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி யுலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் அடிவைக்க வொண்ணாதபடி கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்களென்கிற வாசியின்றிக்கே பொழில்களெல்லாம் இலையுலர்ந்து அழகழியப் பெற்றன என்கிறான். இப்படி அசேதநவஸ்துக்களையுங்கூட விசாரப்படுத்திக்கொண்டே காட்டுக்கெழுந்தருளினவன் பதினாலாண்டு கடந்த பிறகு மீண்டு திருபயோத்தித்கு எழுந்தருளுகையில் அகால பலிநோவ்ருகூஷா: என்னும்படியாயிற்று. ஆகவிப்படி தன்னுடைய விச்லேஷத்தில் வாடியுலர்ந்தும் ஸம்ச்லேஷத்தில் செழிப்பற்றோங்கியும் நின்றன அசேதனங்களென்றால் அவன்றன்னுடைய குணப்பெருமையை என்னென்று சொல்லுவது! கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில்-வம்சம் ரகோரநுஜிக்ருக்ஷுரிஹாவதீர்ண: திவ்யைர் வவர்ஷித ததாத்ர பவக்குணௌகை: த்வத்ஸந்நிதி ப்ரபவசைத்யஜீஷோ யதாஹி; வ்ருகூஷாச்ச தாந்திமலபந்த பவத்வியோகே என்றச்லோகத்தினால் இக்குணத்திற்கு உருகினார். ஆசார்ய ஹருதியத்தில் “கோஸல கோகுலசராசரம் செய்யுங் குண மொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்” என்ற சூர்ணையும் அதன் வியாக்கியானமும் ஸேவிக்கத்தக்கன. இப்பாசுரத்தில் “புற்பாமுதலா” என்று தொடங்கி மூன்றடிகளாலும் கீழே விவரித்த மஹாகுணமே அருளிச் செய்யப்படுகிறதாகப் பிள்ளான் முதலான ஸகல ஆசாரியர்களும் ஒரு மிடறாக அருளிச்செய்தார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒருவர் தாம் த்ரமிடோபநிஷத் தாத்பாய் ரத்நாவளியில் இத்திருவாய்மொழிக்கான ச்லோகத்தில் இப்பாசுரத்தின் பொருளாக—ஸாகேதே முக்திதாநாத்” என்றருளிச் செய்தார்; அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றிய கதையை இப்பாசுரத்திற்கு அர்த்தமாகக் கருதினார். ஆறாயிரப்படி ஸ்ரீஸீக்தி காண்மின்;-“ப்ராக்ருத வஸ்துக்களே தாரகபோஷக போக்யமாயிருக்கக்கடவ இப் ப்ரக்ருதிமண்டலத்திலே வைத்துக்கொண்டு திருவயோத்யையிலே வர்த்திக்கிற தூர்வாதி நிகில ஜந்துக்களையும் கர்மயோகாத்யு பாயம் பண்ணுதிருக்கச் செய்தேயும் திருநாட்டிலுள்ளாரைப்போலே தன் திருவடிகளே தாரக போஷக போக்யமாக்கியருளின் இம மஹாகுணத்தை யுடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை யநுபவிக்கிறார்.” என்று இப்படியிருக்கவும் தேசிகன் வேறுவகையாகப் பொருள் கூறியது வாதிகேஸாஜீ அழகியமணவாளச் சீயருடைய பன்னீராயிரவுரையில் ப்ரதிபத்தியின் கனத்தாலே யென்று தெரிகிறது. அவ்வுரையில் அங்ஙனே பொருளுரைக்கப்பட்டது. மற்றுங் கற்பரோ” என்ற விடத்து மற்றும் என்றது தேவதாந்தரங்களைக் கருதியன்று; ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவாவதரய்களையும் பரத்வாதி நிலைகளையும். ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவாதாரங்களையும் பரத்வாதி நிலைகளையும். பாவோ நாந்யத்ர கச்சதி என்று திருவடி சொன்னதும், என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றிகளைக் காணாவே என்று திருப்பாணாழ்வார் அருளிச் செய்ததும் இங்கே நினைக்கத்தக்கன.

English Translation

In the blessed Ayadhya, the land created by Brahma, -down to the meanest gross and insect without exception, he gives on exalted place to all the sentient and the insentient, so would any scholar study about a king other than Rama?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்