விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாறு நிரைத்து*  இரைக்கும் சரங்கள்,*  இன 
    நூறு பிணம்*  மலை போல் புரள,*  கடல்
    ஆறு மடுத்து*  உதிரப்புனலா,*  அப்பன் 
    நீறுபட*  இலங்கை செற்ற நேரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கை நீறு பட செற்ற நேர் - லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்)
மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் - எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே
இனம் நூறு பிணம் - இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை
மலை போல் புரள - மலை மலையாகப் புரண்டு விழவும்
கடல் - கடலானது

விளக்க உரை

இலங்கையைப் பாழ்படுத்தின விதம் வியந்து கூறப்படுகிறது இதில். ஒயாதே அம்புகளைப் பொழிகையாலே அம்புகளானவை ஒன்றோடொன்று தாக்கி அதனாலெழுந்த வொலி விசைத்திருந்தது. அரக்கர் பிணய்களானவை நூறு நூறு இனமினமாக மலைபோலே புராண்டு வீழ்ந்தன. கடல் ரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே வரவெதிர்க்க நின்றது. பிராட்டி அசிரேணைவ லங்கேயம் ச்மசாந ஸத்ருசீ பவேத் என்று சொன்ன படியே சுடுகாடாயிற்றென்கிறார் இலங்கை நீறு ட வென்று.

English Translation

Arrows grinding against countless heavy arrows, corpses by the hundred heaped like mountains, pools of blood flowing like rivers everywhere, -Oh, how my Father destroyed Lanka to dust!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்