விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆவி திகைக்க*  ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,* 
    பாவியேனைப்*  பல நீ காட்டிப் படுப்பாயோ,*
    தாவி வையம் கொண்ட*  தடம் தாமரை கட்கே,* 
    கூவிக் கொள்ளும் காலம்*  இன்னம் குறுகாதோ?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆவி திகைக்க -நெஞ்சு கலங்கும்படியாந
ஐவர் குமைக்கும் - பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான
சிற்றின்பம்பல - அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை
பாவியேனை நீ காட்டி - பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து
படுப்பாயோ - முடிக்க நினைக்கிறாயோ?

விளக்க உரை

மனம் கலங்கும்படியாக ஐந்து இந்திரியங்களும் வருத்துகின்ற பலவகையான சிற்றின்பத்தை எனக்கு நீ காட்டிப் பாவியேனை அழிக்க நினைக்கின்றாயோ? பூலோகத்தை அளந்துகொண்ட தாமரை போன்ற திருவடிகட்கு அழைத்துக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்கிறார்.

English Translation

My soul is afflicted by pleasures that the senses heap, would you still destroy me with distractions? Has the time not come for me to be united to your lotus-feet, -that grew and strode the Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்