விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரான் அடிமேல்,* 
    நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையும் ஒருபத்தும் வல்லார்* 
    ஊற்றின்கண் நுண் மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன் - பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு - சொற்களை ஆராய்ந்தெடுத்து
மது சூதபிரான் அடி மேல் -எம்பெருமான் திருவடி விஷயமாக
சொன்ன- அருளிச்செய்த
தோற்றங்கள் ஆயிரத்துள்- ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள்

விளக்க உரை

வாசனையைக் கொண்டுள்ள அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர், சிறந்த வார்த்தைகளை ஆராய்ந்து கொண்டு மதுசூதபிரானுடைய திருவடிகள்மேல் அருளிச்செய்த தாமே தோன்றிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற பத்துப் பாசுரங்களாகிறஇவற்றையும் வல்லவர்கள் நீர் ஊறுகின்ற ஊற்றிலேயுள்ள நுண்ணிய மணல் போன்று நீராக உருகாநிற்பர்.

English Translation

This decad of the thousand revelations of fragrant-groved kurugur's Satakopan on the feet of Madhusudana, with choicest words, will make the heart melt like fine sand in water.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்