விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிற்கும் நால்மறைவாணர் வாழ்*  தொலைவில்லிமங்கலம் கண்டபின்,* 
    அற்கம் ஒன்றும் அற உறாள்*  மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,* 
    கற்கும் கல்வி எல்லாம்*  கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,* 
    ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து*  உள் மகிழ்ந்து குழையுமே.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னைமீர் - தாய்மார்களே!
இவள் - இப்பெண்பிள்ளையானவள்
நிற்கும் நால்மறை வாணர் வாழ் - ஸ்திரமான நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்கள் வாழுமிடமான
துலைவில்லிமங்கலம் கண்ட பின் - துலைவில்லித்திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற பின்பு
அற்கம் ஒன்றும் அற உறாள்- அடக்கம் சிறிதுமுடையளல்லளாய்

விளக்க உரை

(நிற்கும் நான்மறை) துலைவில்லித் திருப்பதிக்கு இவளை அழைத்துச் சென்றவர்கள் அங்கே வேதபாராயண வைபவங்களையும் கேட்பிக்கவேணுமோ? நான்கு வேதங்களிலும் பாரங்கதரானவர்கள் அங்கே வேதாத்யயனங்கள் செய்யுமழகைக்கண்டாள், இந்த வேதங்கலையெல்லாம் ஆதியிலே நான்முகனுக்கு உபதேசித்தவனன்றோ நம்பெருமான் என்று அவ்வழியாலே அவனிடத்துக் காதல் மிகப்பெற்றாள், அவனது கட்டளையான நான்மறைகளையும் ஓதுகின்ற பரமபாகவதர்களன்றோ இவர்களென்று ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பக்திப்பெருங்காதல் கொள்ளப்பெற்றாள், இப்படி பகவத்பாகவத பக்தியே வடிவெடுத்தவளான இவளை ஸம்ஸாரிகளான நீங்கள் இனி உறவுகொண்டாடி விரும்பத் தகுதியுண்டோ வென்கிறாள் தோழி. அற்கமொன்றும் அறவுறாள் – ஸ்த்ரீகளுக்கு முக்கிய லக்ஷணமான அடக்கம் அடியோடேபோயிற்று. மலிந்தாள்கண்டீர் – இருக்கவேண்டிய மரியாதையை மீறிநின்றாள். திருமங்கையாழ்வார் * என்சிறகின்கீழடங்காப் பெண்ணைப்பெற்றேன் * என்று தாய்சொல்லாலே பேசின அர்த்தம் இங்குத் தோழி பேச்சாலே வெளிவந்த்தாயிற்று.

English Translation

See, after going to Tulaivilli-Mangalam, -where Vedic seers throng, -she has lost her self-control and become possessed, "Dark hued Lord", she keeps on calling, -with rising joy, -then pleased beyond measure, she falls into a swoon.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்