விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீள் நிலத்தொடு வான் வியப்ப*  நிறை பெரும் போர்கள் செய்து* 
    வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்*  உட்பட மற்றும்பல,* 
    மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்*  என் அப்பன் தன் மாயங்களே* 
    காணும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீள் நிலத்தொடுவான் வியப்ப - மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக
நிறைபெறும் போர்கள் செய்து - நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி
வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல - பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே - பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே

விளக்க உரை

(நீணலத்தொடு) இப்பாட்டில் வாணனாயிரந் தோள்துணித்த சரித்திரமொன்றே அநுபவிக்கப்படுகிறது. பலிசக்ரவர்த்தியின் ஸந்த்தியிற் பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள் ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்த்தாக கனாக்கண்டாள். அதைத் தன் உயிர்த்தோழியான சித்திரலேகை யென்பவளிடம்தெரிவித்தாள். ஆனால் அவன் இன்னானென்று அறிந்திலர். அத்தோழியானவள் உலகத்திலுள் ஸுந்தர புருஷர்கள் யாவரையும் அறிந்திருப்பதோடு ஒவ்வொரு உருவத்தையும் அப்படியே எழுதிக்காட்டவும் வல்லமை பெற்றிருந்ததனால் அங்ஙனம் பல வுருவங்களையும் எழுதிக்காட்டி இவனா? இவனா? என்று உஷையைக் கேட்டுவகையில்,! கடைசியாக அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருத்தனென்று நிஷ்கர்ஷிக்கப்பட்டது. பின்பு உஷை அவனைப் பெறுதற்கு உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினார் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து அந்தப்புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை யநுபவித்துவந்தாள். இச்செய்தியைக் காவலாளராலறிந்த அவளது தந்தையான பாணன் தன் அநுமதியின்றிக்கே இப்படி நடந்து விட்டதே என்கிற சீற்றத்தினால் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருந்தான். இப்படியிருக்கையில் த்வாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தார்கள்.

English Translation

The Earth and sky were wonder-struck to witness the great war. He then cut as under the thousand arms of the mighty Bana. He came as a manikin and took the Earth, by walking three good steps. My heart can see them all; now what can trouble me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்