- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(இகல்கொள்புள்ளை) கம்ஸனால ஏவப்பட்ட ஓர் அஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில் கண்ணன் அவனது வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக்கிழித்திட்டனன் என்ற வரலாறுகாண்க. இந்த வரலாற்றை யாதவாப்யுதய காவ்யத்தில் வருணிக்கின்ற வேதாந்தவாசிரியன் ••• ஸபக்ஷகைலாஸநிபஸ்ய கோபா, பகஸ்ப பக்ஷாந் அபிதோப்பந்து, வநே த்தந்யாநபி கோரவ்ருத்தீந க்ஷேப்தும் ப்ரவ்ருத்தா இவ கேதுமாலா * என்றார் அந்த பகாசுரன் வந்தது இறகு முளைத்த கைலாஸமலையே ஊர்ந்துவருவது போன்றிருந்ததாம், அங்கு எங்கும் கட்டிவைத்தார்களாம், இனி யாரேனும் கண்ணனுக்குத் தீங்கு செய்யவந்தால் அவர்களுக்கும் இதுவேகதி என்று காட்டுதற்காக என்கை. இமிலேறுகள் செற்றது – வில்லை வளைத்தவர்களுக்கே ஸீதாபிராட்டியை விவாஹம்செய்து கொடுப்பது என்று சுல்கம் வைத்திருந்ததுபோல, யாவர்க்கும் அடங்காத ஏழு எருதுகளை வலியடக்கினவர்களுக்கே நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்வித்துக்கொடுப்பதென்று நிபந்தனை வைத்திருந்ததனால் கண்ணபிரான் அங்ஙனமே செய்து பின்னை தோள் புணர்ந்தானென்பது வரலாறு.
English Translation
Ripping the beak of the Baka-bird, killing the seven bulls, destroying the tall kurundu trees, -night and day I am blest to sing these and other wonders that my Lord performed, when he came and strode the wide Earth. I have no despair.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்