விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 
    வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 
    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 
    பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காதல்மென் பெடையோடு- காதலையே நிரூபகமாகவுடைய அழகியபேடையோடு
உடன் - கூட
மேயும் - இரை தேர்கின்ற
கரு நாராய்- நல்லவர்ணமுடைய நாரையே!
வேதம் வேள்வி ஒலி முழங்கும் - வேதகோஷமும் வைதிக்கரியைகளின் கோலாஹலமும் முழங்கப் பெற்ற

விளக்க உரை

(காதல் மென்பெடை) ஆர்த்தர்களுக்கு ஆர்த்தியைப் பரிஹரித்து ரக்ஷணம்டி செய்வதிலேயே தீக்ஷை கொண்டிருக்கின்ற எம்பெருமான் திருவண்வண்டூரிலே வேதவாலியையும் வேளவியொலியையும் காதாரக்கேட்டுக்கொண்டு தன்னுடைய ஆர்த்தரக்ஷ தீக்ஷையையும் மறந்து அங்கே தங்கிக்கிடக்கிறான், அவனுடைய பதாரவிந்தங்களிலே சென்று அஞஜலிபண்ணி நின்று என் விஷயமாகச் சில வார்த்தைகள் சொல்லவேணுமென்று நாரையை இரக்கிறார். கருநாராய்! – நாரைக்கு வெண்மை நிறம் ப்ரஸித்தமாயிருக்க “கருநாராய்“ என்றது எங்ஙனே? என்று சங்கிக்கவேண்டா. உடம்பிலே வைவர்ணிய முண்டானால் “உடம்பு வெளுத்துப்போயிற்று“ என்று சொல்லுவதுண்டு, அப்படிப்பட்ட வெண்மையின்றிக்கே மேனி புகர் பெற்றிருக்கிறபடி, பிரிந்தவன்வடிவுக்கு ஸ்மாரகமாயிருக்கிறபடி என்பது இருபத்தினாலாயிரம். “கூடத்திரிகையாலே நரைதிரை நீங்கி வடிவுபுகர்த்தபடி பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காதாகாதே, தான் உடம்பு வெளுத்துக்கிடக்கிறாளிறு என்பது ஈடு முப்பதாயிரம். “காதல் மென்பெடையோடுடன் மேயும்“ என்றதனால் ஸ்வாபதேசத்தில் ஆழ்வான் ஆனந்தாழ்வான் போன்ற கருஹஸ்தாசரமிகளின் பெருமை தெரிவிக்கப்படுகிறது. அன்றியே, சிஷ்யர்களோடு கூடி பகவத் குணாநுபவம் பண்ணுகின்ற ஆசார்யர்களைச் சொல்லிற்றாகவுமாம்.

English Translation

O Dark egret searching for worms, with your love-bird companion! Our Lord who swallowed all the worlds resides in cool Tiruvan-Vandur, resonant with Vedic chants. Go fall at his feet, and tell him of my lowly plight.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்