விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
    சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 
    நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
    சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாமங்கள் ஆயிரம் உடைய - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான
நம் பெருமான் - எம்பெருமானுடைய
அடிமேல் -  திருவடிகளின்மேலே
சேமம் கொள் - திண்ணிய அத்யவஸாய முடையவரான
தென் குருகூர் சடகோபன் - ஆழ்வார்

விளக்க உரை

(நாமங்களாயிரம்.) இத்திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸம்ஸாரிகளாயிருக்கச் செய்தேயும் மற்றையோர்களிற் நாட்டில் சிறப்புப் பெற்றாராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருக்கல்யாண குணங்களுக்கும் திவ்ய சரித்திரங்களுக்கும் வாசகமான ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களை யெல்லாம் வைத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய், அந்தஸஹஸ்ரநாமம் போலவே பகவத்குண விபூதிகளை ஒழுங்குபடத் தெரிவிக்குமதான இவ்வாயிரத்தினுள் இவை பத்தையும் திருவல்ல வாழ் விஷயமாகச் சொல்லவல்லவர்கள் சரீரஸம்பந்தத்தோதே யிருந்து வைத்தும் பகவதநுபவமாகிய சிறப்பையுடையவர் என்றதாயிற்று. சேமம்- ஷேம மென்ற வடசொல் விகாரம்

English Translation

This decad of the thousand songs, on peaceful Tiruvallaval sung by kurugur satakopan with knowledge and understanding, addresses the Lord of thousand names. Those who can sing it will excel in this world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்