- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(அரியேறே.) பிரானே! உன்னுடைய வைலக்ஷண்யத்தை நீயே காட்டித்தந்து அடிமையிலே என்னை ஊன்றவைத்தாயானபின்பு உன் திருவடிகளைத்தந்து தீரவேணுமன்றோ; தந்து பின்னை ஸம்ஸாரத்தைக் களைந்தொழியாய் என்கிறார். மேனாணிப்புத்தோற்ற விருக்குமிருப்பை அரியேறே! என்ற விளி காட்டும். அந்த மேனாணிப்புக்குத் தகுதியான வடிவுபடைத்தவ னென்கிறது அம்பொற்சுடரே! என்பது. விலக்ஷயமான பொன்போலே ஸ்ப்ருக்ஷணீணமான ஒளியையுடையவனே! என்றபடி. வடிவின் புகரைக்காட்டி என்னை யீடுபடுத்திக்கொண்டவனே! என்றவாறு. செங்கட்கருமுகிலே! - வாத்ஸல்யமாகிற அம்ருதத்தை வர்க்ஷிக்கிற திருக்கண்களையுடையவனே! என்றபடி. எரியேபவளக்குன்றே! = எரியென்று கேட்டை நக்ஷத்திரத்திற்கு வாசகமாய் நக்ஷத்ரஸாமாந்யத்தைச் சொல்லி நிற்கும். நக்ஷத்ரமண்டலத்ளைவும் ஓங்கியிருக்கிற பவளக்குன்றபோலே (பவழமயமான மலைபோலே) விலக்ஷணமான வடிவு படைத்தவனே! உகவாதார்க்கு அபிபவிக்க வொண்ணாமையும் உகந்தார்க்குப் பரமபோய்னாயிருக்கையும் இத்தாவல் நினைக்கிறது. நால்தோளெந்தாய்! = கல்பகதரு பணைத்தாற்போலேயிருக்கிற திருத்தோள்களைக்காட்டி என்னை அநந்யார்ஹ சேஷப்படுத்திக் கொண்டவனே! என்கை. எம்பெருமானுடைய திருத்தோள்கள் நம்மாழ்வாருடைய திருவாக்கில் நுழைந்து புறப்பட்டவாறே விலக்ஷணமான வொருபெருமைபெறும். ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில்.
English Translation
O King-of-lions, golden radiance, red-eyed cloud-hued Lord! O Dazzling coral-mountain, my Lord of four arms, Lord in Kudandai! Through your grace, you made me your bonded sert. Now give me your protection and rid me of my birth. No more I can bear this.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்