விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
    தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*
    செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
    தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செழு ஒண் பழனம் - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய
குடந்தை கிடந்தாய் - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
செம் தாமரை கண்ணா - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே!
அழுவன் தொழுவன் - அழுவேன் தொழுவேன்;
ஆடி காண் பன் - கடனம் செய்து பார்ப்பேன்;

விளக்க உரை

(அழுவன் தொழுவன்.) பிராவே! உன் கண்ணழகிலே யீடுபட்டுப் பலவகை ப்ரவ்ருத்திகளும் பண்ணின விடத்திலும் பயன் பெற்றிலேன்; உன் திருவடிகளைச் சேரும்படி நீயே பார்த்தருள வேணுமென்கிறார். அழுவன் தொழுவன் - சிறுவர் அழுகையினாலேயே எதையும் ஸாதிப்பர்கள்; அறிவுடையார் தொழுகையினாலேயே எதையும் ஸாதிப்பர்கள்; இருவர் படியையும் நான் ஏறிட்டுக்கொண்டு அழுவதும் தொழுவதும் செய்தாயிற்று. ஆடிக்காண்பன் - “இத்தனை சோறிடுகிறோம்; ஆடுகிறாயா?” என்றால், பெரும் பசியாளர் ஆடுவதுண்டே; அப்படி ஆடியும் பார்ப்பேன். பாடியலற்றுவன் = சித்தப்பரமம். கொண்டவன் பாடுவதும் அலற்றுவதும் செய்யுமாபோலே அவையும் செய்யா நின்றேன். தழுவல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் = இங்கே வல்வினையென்று காதலைச் சொல்லுகிறது; வல்வினையின் பயனாக வுண்டான காதல் என்றபடி. அபேக்ஷித்தபடி ஸித்தயாமையாலே காதலை வல்வினையாகக் கருதினாராயிற்று. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற ப்ரபல பாபத்தாலே, நீ வருவதாக நினைத்துப் பக்கங்களிலே பார்த்து, வந்து காட்கிரதரக் காணாமையாலே லஜ்ஜையோடே கவிழ்தலையிட்டிருப்பே. தலைகவிழ்ந்து நிற்பேன்.

English Translation

I weep and pray, I dance and sing, and praise you forever, I look away and hang my head in shame for my deeds. O Lotus-eyes Lord reclining in fertile kudandai fields, pray show this repentent self the way to your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்