விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?*  எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று* 
    கைதவங்கள் செய்யும்*  கரு மேனி அம்மானே*
    செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    கைதொழ இருந்தாய்*  அது நானும் கண்டேனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வையம் தேவர் அறா - நிலத் தேவர்கள் இடைவிடாமல் வர்த்திக்கிற
சிரீவரமங்கலம் நகர் - வானமலைப் பதியிலுள்ளாரெல்லாரும்
கை தொழ - ஸேவிக்கும்படி
இருந்தாய் - எழுந்தருளியிருப்ப வனே!
நானும்  - அடியேனும்

விளக்க உரை

(எய்தக்கூவுதல்.) கீழ்ப்பாட்டில் “உன்னை யெங்கெய்தக் கூவுவனே!” என்ற ஆõ“வாரைநோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! ஒன்றும் பெறாதவர்போலே கூப்பிடாநின்றீரரே; சிரீவரமங்கல நகரிலிருப்பை உமக்குக் காட்டித் தரவில்லையோ நான்?” என்றருளிச்செய்ய, அதற்கு ஆழ்வார், அது இல்லையென்று நான் சொன்னேனோ? அவ்வளவால் த்ருப்தி பிறக்கவில்லையே! என்கிறார். எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே!= என்னைப் பெறுவதற்கு நீ முயற்சி பண்ணவேண்டியிருக்க, உன்னைப் பெறுவதற்கு நான் முயற்சி பண்ணவேண்டும் படியாவதே! இது தகுதியோ? என்றவாறு. சேதநலாபம் எம்பெருமானுக்கா? எம்பெருமானுடைய லாபம் சேதநனுக்கா? என்று பார்க்குமளவில், சேதாலாபம் ஈச்வரனுக்கு என்பது சாஸ்த்ரார்த்தமாகத் தேறி நிற்கும். தன்னுடைய ஸொத்துக் கைதவறிப்போனால் அதைப் பெறுதற்கு ஸ்வாமியானவன் முயல வேண்டியிருக்குமேயல்லது, ஸொத்து ஸ்வாமியைப் பெறுதற்கு முயல்வதென்பது கிடையாது; இது இங்கே தலைகீழாயிற்று! என்கிறார். எவ்வதெவ்வத்துளாயுமாய் நின்ற கைதவங்கள் செய்யும் அம்மானே! தெய்வமென்று சத்ருஸமுஹத்திற்குப் பெயர்; “தெவ்வர் அஞ்ச நெடும்புரிசையுயர்ந்த பாங்கர்” என்று குலசேகராழ்வாருடைய பிரயோகமும் காண்க, ‘எல்ல’ என்றது எப்படிப்பட்ட என்றபடி, எவ்வகைப்பட்ட சத்ரு ஸமுஹத்தினுள்ளும் புகுந்து க்ருத்ரிமங்களைச் செய்யும் பிரானே! இங்கே ஈடு- “புத்தமுரியாய் அவர்கள் நடுவே புக்குநின்று அவர்களுக்குண்டான வைதிகச்ரத்தையைப் போக்கினபடி. (கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே!) வசுகங்களாம் யுக்திகளாலும் க்ருத்ரிமத்தைப்பண்ணி வைதிக ச்ரத்தையைப் போக்கி அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக்காட்டி வாய்மானப் பண்ணினபடி. தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களை “வப்ஙராயராக்கி ஒருவனம்புக்கிலக்காம்படி பண்ணிவைத்தான்.”

English Translation

O Dark-hued Lord who enters into every bit and parcel, and performs many magical acts, is it possible for me to call you? O Lord of Srivaramangal-nagar where gadly men perform Vedic Sacrifices, you are accessible to worship, I have seen this too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்