விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீயும் பாங்கு அல்லைகாண்*  நெஞ்சமே நீள் இரவும்* 
    ஓயும் பொழுது இன்றி*  ஊழி ஆய் நீண்டதால்* 
    காயும் கடும் சிலை*  என் காகுத்தன் வாரானால்* 
    மாயும் வகை அறியேன்*  வல்வினையேன் பெண் பிறந்தே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சமே - மனமே!
நீயும் - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும்
பாங்கு அல்லை காண் - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை;
நின் இரவும் - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும்
ஓயும் பொழுது இன்றி - ஓயுங்காலம் இல்லாமல்

விளக்க உரை

(நீயும் பாங்கல்லைகாண்) அநிஷ்டங்களைத் தொலைக்கவல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறான். பிராட்டியை அசோகவனத்திலே வைத்தபோது மாயாவியான இராவணன் ‘இராமன் தலையறுப்புண்டு தொலைந்தான்’ என்று தோன்றுமாறு ஒரு மாயா கிரஸ்ஸைக் கொண்டுவந்து பிராட்டிக்குக் காட்டி ‘இதோபார் ஸீதே! உன் கணவன் தலையறுப்புண்டு ஒழிந்தான்’ என்ன, அது கேட்டுப் பிராட்டி வருந்திக் கிடக்கும் க்ஷணத்திலே இராமபிரான் கடற்கரையிலே நின்று தனது சார்ங்கவில்லை ஒலிப்பிக்க, அவ்வொலியானது பிராட்டியின் செவியிலே புகுந்து ஆர்வஸிப்பித்ததென்று கேட்டிருந்த பராங்குச நாயகி, அப்படியாகத் தன்னையும் ஆச்வஹிப்பிக்க ஒரு வீரரு செய்தருளவில்லையே! என்ற இன்னாப்புத் தோன்றக் காயுங்கடுஞ்சிலைநும் காகுத்தன் வாரானால் என்கிறான். “சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுநொலோ” என்று ஆண்டாளுடைய நிர்வேதம் இங்கு நினைக்கத்தக்கது. மாயும் வகையறியேன் = பிராட்டி அசோகவனத்திலே “விஷ *** - விஷஸ்ய தாதா ஈ ஹி மேஸ்தி கச்சித் க்ஷத்ரஸ்ய வா வேச்மநி ராக்ஷஸஸ்ப” என்று ‘இவ்வரக்கன் மலையிலே என்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கு இத்தனை விஷம் கொடுப்பாரில்லையே; நின்று கொல்லாதே உடனே கொல்லவல்லதொரு கத்திதானும் கொடுப்பாரில்லையே!” என்று துடித்தாப்போலே இவளும் துடிக்கிறாளாயிற்று. பெண் பிறந்தே யென்றது முடியமாட்டாமைக்கு ஹேதுசொன்னபடி “பிறர்க்காக ஜீவிக்கவேண்டும் பாதந்த்ரஜன்மத்திலே பிறக்கைக்கீடான மஹாபாபத்தைப் பண்ணினேன்” என்பது ஈடு.

English Translation

See, you are not with me, O Heart The long night stretches into an aeon. My Kakutsha Lord wielding the scorching bow does not come. Sinner, born as a female, I know not how to end my life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்