விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊர் எல்லாம் துஞ்சி*  உலகு எல்லாம் நள் இருள் ஆய்* 
    நீர் எல்லாம் தேறி*  ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்* 
    பார் எல்லாம் உண்ட*  நம் பாம்பு அணையான் வாரானால்* 
    ஆர் எல்லே! வல்வினையேன்*  ஆவி காப்பார் இனியே?* (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊர் எல்லாம் துஞ்சி - ஊர் முழுவதும் உறங்கிப்போய்
உலகு எல்லாம் - உலகம் முழுவதும்
கள் இருளாய் - காடாந்தகராம்மிக்கு
நீண்டது - நெடுகிச் செல்கின்றது;
ஆல் - அந்தோ!, (இந்நிலைமையில்)

விளக்க உரை

(ஊரெல்லாந்துஞ்சி) ஜகத்தடங்கலும் இருள்மூடி நின்றதுவு ரக்ஷகனென்று பேர் பெற்றிருக்கும் ஸர்வேச்வரனோ வந்து ரக்ஷித்தருள்கின்றிலன்; இனியென்னை ரக்ஷிப்பார் ஆரென்கிறாள். ஊராருடைய பழமொழியே எருவாகத் தன்னுடைய காதல் வளருமதாகையாலே அந்த எருவுக்கு அவகாசமில்லாதபடி ஊரெல்லாம் துஞ்சிற்றே! என்று வருந்துகிறான். இலங்கையினுள் திருவடி புகும்போது ராக்ஷஸிகளெல்லாரும் உறங்கிக் கிடந்தாற்போலே இங்கும் பழிசொல்லுவாரடங்கலும் உறங்கிப் போனார்கள். இவள் பிறந்தவூராகையாலே இவளது நிலைமையைக் கண்டு சோகித்து, கோரைசாய்ந்தாற்போலே எல்லாருமொக்க உறங்கினபடியைச் சொல்லிற்றாகவுமாம். பண்டு ராமராவணயுத்தத்தில் நாகபாசபந்தத்தினன்று ஜாம்பவான், திருவடிமுதலான சிலராவது உணர்ந்திருந்தார்கள். அப்படியுமில்லையாயிற்றிங்கு. ஊரைவிட்டு வெளியேசென்று தரிக்கைக்கும் அவகாசமில்லாமே உலகெல்லாம் நள்ளிருளாயிற்று. கண்ணாலே ஒருபொருளும் காணமுடியாத நிலைமையாயிற்று. நீர் நிலங்களிலுள்ள ஸாரஸபஷி முதலானவைகளும் கோலாகலமற்று ஓய்ந்து போகையாலே அந்த நீர்நிலைகளெல்லாம் அலையடங்கித் தெளிந்து கிடக்கின்றன. இரவு பகல் என்கிற விபாகமின்றிக்கே ஓரேநாளாராத்திரியாயிறாநின்றது. மநுஷ்யர்களினுடைய ராத்திரியிற்காட்டில் தேவர்களினுடைய ராத்திரிக்கு அதிக நீட்சியுண்டு; அதனிலும் விஞ்சிய நீட்சியாயிற்று. இந்த நிலையில் பரமகாருணிகனான அந்தப் பாம்பணையானும் வாராதொழிந்தான். பிரளாயத்து வந்தவாறே உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமென்பெருமான் இவ்வாபத்திலே வந்து முகங்காட்டி உதவுகின்றிலர்; இப்படியானபின்பு தரிக்கும்வகை என்னோ! என்கிறான்.

English Translation

The populace sleeps, the world is pitch-darkness, the waters have calmed. Night stretches into eternity. The Lord who swallowed the Earth sleeps on a serpent couch. Alas, he does not come, who can save my sinful soul now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்