விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 
    பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*
    ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,* 
    கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதம் வல்லார்களை கொண்டு - வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு
விண்னோர் பெருமான்- நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய
திருபாதம் - திருவடிகளை
பணிந்து - அச்ரயித்து
இவள் நோய் இது - இவளுடைய இந்த நோயை

விளக்க உரை

வேதவித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மையென்கிறாள். இதில் முதலடியில்இ சிறந்த சாஸ்த்ரார்த்தமொன்று வெளியிடப்படுகிறது; யானையின் மீது ஏறவிரும்புமவர்கள் யானைப்பாகனுடைய அநுமதி கொண்டு புகவேண்டுமாபோலே ஸ்ரீவைஷ்ணவர்களைப் புரஸ்கரித்துக்கொண்டே எம்பெருமானைப்பணிதல் வேண்டுமென்பது ஸத்ஸம்ப்ரதாயம். ஸ்ரீபாபிட: க்ஷ்த்ரபந்துச்ச புண்டரிகச்ச புண்யக்ருத் ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவாந்பவேத்ஃ” என்கிற பிரமாணமும். இதையடியொற்றி நடாதுர்ரம்மாளருளிச்செய்த ஸத்ஸங்காத் பவ நிஸ் ஸ்ப்ருஹோ குருமுகாத் ஸ்ரீசம் ப்;ரபத்யாத்மவாந்” என்பதும் இங்கே அறியத்தக்கன.

English Translation

You mix and pour toddy with wasteful worlds and sinful deeds and dance to loud music in a frenzy. Oh, this is lowly, with the help of Vedic seers, worship the auspicious feet of the Lord of celestials. That will cure this girl's malaise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்