- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடு அறுக்கவும மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள். பராய் என்றது பராவியென்றபடி. பராவுதலாவது பாரித்தல். ஒன்பதினாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி ஆகிய நான்கு வியாக்கியானங்களிலும் இவ்விடத்தில் ஏகரூபமாகவே ஒரு அச்சுப்பிழை புகுந்துள்ளது; அதாவது, “பராவி-பாரித்து” என்றிருக்கவேண்டுவது ‘ப்ரார்த்தித்து’ என்றே விழுந்திட்டது. இங்கு அதுவன்று பொருள்;திருத்திக்கொள்க. இரண்டாமடியில் “சுணங்கை-எறிந்து” என்றும் “சுணம்-கையெறிந்து”என்றும் கொண்டு பொருள் கூறுவர். சுணங்கையென்பது சுணங்கைக்கூத்தைச் சொன்னபடி: அதாவது கையைத்தட்டி ஆடவதொருகூத்து; தேவதாந்தரஸமாராதனமாகச்செய்யும் செய்கை களிலே இந்தக் கூத்தாட்டமும் ஒன்றாகக்;கொள்ளத்தக்கது. “துணங்கை யென்று பாடமாய் துணங்கையென்ற கூத்தாகவுமாம்” என்பர் பன்னீராயிரவுரைகாரர். சுணம், கையெறிந்து
English Translation
To cure her spirits. You sacrifice a goat and pour toddy, strike your hands and shake your shoulders, what use, Ladies?, -like watching the donkey's lips twitch while the grains disappear! Listen, go seek the Vedic seers and devotees of the Lord, now
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்