விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூத்தர் குடம் எடுத்து ஆடில்*  'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,* 
    வாய்த்த குழல் ஓசை கேட்கில்*  'மாயவன்' என்று மையாக்கும்,*
    ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்*  அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,* 
    பேய்ச்சி முலை சுவைத்தாற்கு*  என் பெண்கொடி ஏறிய பித்தே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாய்த்த குழல் ஓசை கேட்கில் -இனிய குழலின் ஓசையைக் கேட்டாளகில்
மாயவன் என்று - க்ருஷ்ணன் என்று நினைத்து
மையாக்கும் - மோஹியா நிற்பாள்;
ஆய்ச்சியர் - இடைச்சிகள் கையிலே
வெண்ணெய்கள் காணில் - வெண்ணையைக் கண்டாளாகில்

விளக்க உரை

ஜீவனத்திற்காகக் குடக்கூத்தாடித் திரிகிறவர்களுண்டே; அவர்கள் வந்து குடங்களை வீசியெறிந்து ஆடுமதுகண்டால் குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல கோவாகிய கோவிந்தனே ஆடுவதாக ப்ரதிபத்திபண்ணி அதனை அருகேயிருந்து காண ஓடுகின்றாள். எப்படிப்பட்டவர்களையு மீடுபடுத்தவல்ல புல்லாஙகுழலின் இசைவந்து செவிப்பட்டால், கண்ணபிரானென்று சொல்லி வியாமோஹிக்கின்றாள். இடைச்சிகள் கொணர்ந்து விற்கும் வெண்ணையைக் கண்டால், அன்று அவன் திருவாய்ப்பாடியில் களவுகண்டு அமுதுசெய்த வெண்ணெயோடொத்த வெண்ணெய் இது என்று சொல்லா நின்றாள்; தாய் உதவாத தனிமையிலே பூதனையென்பவள் தாய்வடிவுகொண்டு வந்து நலியப்புக, அவளை முடித்துத் தன்னைச் சேமமாகத் தந்த உபகாரத்துக்குத் தோற்று இவள் பித்தேறினாளாயிற்று; இப்படியும் ஒரு விலக்ஷணமான பிச்சு உண்டோ வென்கிறாள்; திருத்தாய். குடமெடுத்தாடில் என்கையாலே, ஸாதாரணமான கூத்துக்களைப்பொருள் படுத்தாள்; குடக்கூத் தொன்றிலேயே யீடுபடுவாளென்பது பெறப்பட்டது. அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம்செய்யுமாபோலே இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் களிப்புக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடினனாம்; அதில் ஆழ்வார்கள் மிக ஈடுபடுவர்க்ள. “நீரார் கமலம்போல் செங்கண்மாலென்றொருவன், பராரோர்களெல்லாம் மகிழப்பறைகறங்கச், சீரார் குடமிரண்டேந்திச் செழுந்தெருவே ஆராரெனச் சொல்லியாடுமதுகண்டு, எராரிள முலையாரன்னையரு மெல்லாரும், வாராயோ வென்றார்க்குச்ச சேன்றேனென் வல்வினையால்” என்று தொடங்கியுள்ள சிறிய திருமடற் பாசுரம் காண்க.

English Translation

Seeing an acrobat dance on a pot, she runs to him saying, "This is Govinda all right!", Hearing a stray flute melody, she runs out says, "Here comes Govinda!" Seeing the tempting butter of a milkmaid she says, "Aho, the butter he ate!", Such is her madness for the Lord who drank putana's breasts

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்